கோவையில் டாஸ்மாக் பாரில் சப்ளையர் மீது தாக்குதல் - 7 பேர் கொண்ட கும்பல் கைது

தடாகம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், நண்பர்களுடன் சேர்ந்து பார் ஊழியரை தாக்கி விட்டு, பாரில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாருக்கு, பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய இருவரும் மது குடிக்க வந்தனர்.

அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், பாரில் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சேர்மன்ராஜ் (28), இருவரையும் கண்டித்துள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரகுராமனும், அவரது நண்பரும் போன் செய்து மேலும் 7 பேரை அங்கு வரவழைத்துள்ளனர். பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார் ஊழியர் சேர்மன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி, பீர்பாட்டிலால் அவரை தாக்கியுள்ளனர். பின்னர், பாரில் இருந்த மேஜை மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்து சூறையாடினர்.

இதை தடுக்க முற்பட்ட பார் சீனியர்களை மிரட்டி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த சேர்மன்ராஜ் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் பார் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய ரகுராமன், மட்டன்கடை ஊழியர் தினேஷ்குமார் (23), ஆர்.ஜி.புதூரை சேர்ந்த நாகேந்திரன் (31), சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தனசேகரன்(31), குறிச்சியை சேர்ந்த நவீன்(28), வீரகேரளத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்த பிரவீன்(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ராமு, அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....