கோவையில் டாஸ்மாக் பாரில் சப்ளையர் மீது தாக்குதல் - 7 பேர் கொண்ட கும்பல் கைது

தடாகம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், நண்பர்களுடன் சேர்ந்து பார் ஊழியரை தாக்கி விட்டு, பாரில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாருக்கு, பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய இருவரும் மது குடிக்க வந்தனர்.

அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், பாரில் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சேர்மன்ராஜ் (28), இருவரையும் கண்டித்துள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரகுராமனும், அவரது நண்பரும் போன் செய்து மேலும் 7 பேரை அங்கு வரவழைத்துள்ளனர். பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார் ஊழியர் சேர்மன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி, பீர்பாட்டிலால் அவரை தாக்கியுள்ளனர். பின்னர், பாரில் இருந்த மேஜை மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்து சூறையாடினர்.

இதை தடுக்க முற்பட்ட பார் சீனியர்களை மிரட்டி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த சேர்மன்ராஜ் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் பார் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய ரகுராமன், மட்டன்கடை ஊழியர் தினேஷ்குமார் (23), ஆர்.ஜி.புதூரை சேர்ந்த நாகேந்திரன் (31), சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தனசேகரன்(31), குறிச்சியை சேர்ந்த நவீன்(28), வீரகேரளத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்த பிரவீன்(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ராமு, அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...