குன்னூரில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தைகள் - வனத்துறை நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்னூர் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரு சிறுத்தைகள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதி மக்கள் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



கடந்த செப்டம்பர் மாதம் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் தெருக்களில் உலா வரும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இரவு நேரங்களில் வளர்ப்பு நாய்களை வேட்டையாட இந்த சிறுத்தைகள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், சில தினங்களாக அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக தெருக்களில் உலா வந்தது, அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், இம்முறை சிறுத்தைகளை வனத்துறையினர் கண்காணித்து அதனை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...