குன்னூரில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தைகள் - வனத்துறை நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்னூர் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரு சிறுத்தைகள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதி மக்கள் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



கடந்த செப்டம்பர் மாதம் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் தெருக்களில் உலா வரும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இரவு நேரங்களில் வளர்ப்பு நாய்களை வேட்டையாட இந்த சிறுத்தைகள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், சில தினங்களாக அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக தெருக்களில் உலா வந்தது, அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், இம்முறை சிறுத்தைகளை வனத்துறையினர் கண்காணித்து அதனை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...