கோவை கார் வெடிப்பு: கோவை உட்பட தமிழகம் முழுவதும் நடந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நிறைவு - பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் என தகவல்

சோதனையில், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், செல்போன்கள் போன்ற டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் குற்ற சம்பவம் தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 42 இடங்களிலும், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலும் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள என்.ஐ. ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.



குறிப்பாக, கோவையில் இன்று காலை முதல்கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மற்றும் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் வீடுகளிலும் சோதனையானது நடைபெற்று வந்தது.



குறிப்பாக, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. காலை முதல்நடந்த இந்த சோதனையானது தற்போது நிறைவடைந்த நிலையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கார் வெடிப்பில் இறந்தஜமேசா முபின் சதி திட்டத்தை அரங்கேற்ற 3 இரும்பு டப்பாக்களை வாங்கிய நாசர் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.



இந்த சோதனையில், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், செல்போன்கள் போன்ற டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் குற்ற சம்பவம் தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 23 ஆம் தேதி, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, தேசிய புலனாய்வு அதிகாரிகள் தற்போது விசாரணையை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...