கோவையில் மாணவர்களின் தடையை மீறி ரேக்ளா போட்டி துவக்கி வைத்த அமைச்சரின் கார் முற்றுகை

ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று கோவையில் ரேக்ளா போட்டிக்கு மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இதற்கிடையே, தற்போது உள்ள அவசரச்சட்டம் வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு மீதான தடைகள் நிரந்தரமாக நீங்க வேண்டும் எனவும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கொடிசியா வளாகத்தில் இன்று ரேக்ளா போட்டி துவங்கியது. இதனை அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்த போது, இப்போராட்டத்திற்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது அதிமுக-விற்கு கிடைத்த வெற்றி என உரையாற்றினார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டு மீதான தடைகள் அனைத்தும் நீங்கும் வரை ரேக்ளா, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெறக் கூடாது எனவும் கூறிய இளைஞர்கள் தொடர்ந்து, அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களுடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.





Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...