நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு பணம் வழங்க முடிவு!

கோவையில் செயல்பட்டு வந்த இரண்டு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் உள்ள 700 பேருக்கு டான்பிட் நீதிமன்ற உத்தரவுபடி முதலீட்டு பணத்தை திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையில் செயல்பட்டு வந்த 2 நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்த நபர்களுக்கு முதலீட்டு பணத்தை திரும்ப வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் இயங்கி வந்த சீனிவாச பெருமாள் பைனான்ஸ் கார்ப்பரேசன்ஸ் மற்றும் ரங்கே கவுடர் வீதியில் இயங்கி வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பண்ட்ஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர். 

இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலீட்டாளர்களுக்கு டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. 

எனவே முதலீட்டாளர்கள் தங்களது தொகையினை பெறுவதற்கு டெபாசிட் ரசீது, ஆதார், வாக்காளர் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யிடம் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...