ஏப்ரல் 30க்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை - கோவை மாநகராட்சி அறிவிப்பு!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை ஏப்ரல்‌ 30ஆம்‌ தேதிக்குள்‌ செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாநகராட்சிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள்‌ சட்டம்‌ 1998க்கு திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு, 13.04.2023 முதல்‌ தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள்‌ விதிகள்‌ 2023, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள்‌ சட்டம்‌ 1998, பிரிவு 84(1)-ல் ”Five percent property tax payable by an assesse, subject to a maximum of five thousand rupees shall be granted as an incentive, who has paid the property tax within thirty days from the date of commencement of the halfyear” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.

இந்நிலையில், சொத்து உரிமையாளர்கள்‌ சொத்து வரியினை செலுத்த மாநகராட்சி மூலம்‌ பல்வேறு வகையான விழிப்புணர்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி சொத்து உரிமையாளார்களுக்கு குறுந்தகவல்‌ அனுப்புதல்‌, வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம்‌ அறிவிப்புகள்‌ வாயிலாக விழிப்புணா்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்து உரிமையாளர்கள்‌ சொத்துவரியினை தங்களது இல்லம்‌ தேடி வரும்‌ வரி வசூலிப்பாளா்கள்‌, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்‌, வரிவசூல்‌ மையங்கள்‌ ஆகியவற்றில்‌ கடன்‌ மற்றும்‌ பற்று அட்டை, காசோலை மற்றும்‌ வரைவோலை மூலமாகவும்‌ டிஜிட்டல்‌ பரிவர்த்தனை வாயிலாகவும்‌ சொத்துவரியினை செலுத்த வசதிகள்‌ ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளாரகள்‌ தங்களது சொத்து வரியினை ஏப்ரல்‌ 30-ஆம்‌ தேதிக்குள்‌ செலுத்தி ஊக்கத்தொகையினை பெறலாம்.

இதன்‌ மூலம்‌ மாநகராட்சியில்‌ மேற்கொள்ளப்படும்‌ வளர்ச்சி பணிகளில்‌ தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...