கோவை மாநகராட்சியில் வரும் 25, 26-ல் சிறப்பு வரிவசூல் முகாம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

கோவை மாநகராட்சியின் 5, 6, 7, 8, 55, 56, 57, 17, 75, 38, 39, 74, 85, 88, 89, 97, 11, 15, 18, 19, 25, 28, 32, 62, 63, 80, 84, ஆகிய வார்டுகளில் வரும் மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு வரிவசூல் முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் வரும் மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சியில்‌ நடப்பு 2022-23ஆம்‌ நிதியாண்டு நிறைவடைய இன்னும்‌ சில நாட்கள்‌ மட்டுமே உள்ள நிலையில்‌, கோவை‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரிகளின் பாக்கிகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நிலுவை வரிகளை செலுத்த பொதுமக்களின்‌ வசதி கருதி மாநகராட்சியின்‌ கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில்‌ மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த நிதியாண்டின்‌ இறுதி சிறப்பு வரி வசூல்‌ முகாம்கள்‌ நடத்தப்பட உள்ளன.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.5ல்‌ வலியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.6ல்‌ வீரியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.7 மற்றும்‌ 8ல்‌ காளப்பட்டி நேரு நகா்‌ பள்ளியிலும்‌, வார்டு எண்‌.55ல்‌ எஸ்‌.ஐ.எச்‌.எஸ்‌.காலனி மாநகராட்சி பள்ளியிலும்‌, வார்டு எண்‌.56ல்‌ சூர்யா நகர்‌ - ரயில்வே கேட்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.57ல்‌ ஒண்டிபுதூர்‌ நெசவாளர்‌ காலனி பகுதியிலும்‌ நடைபெற உள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான வார்டு எண்‌.17ல்‌ கவுண்டம்பாளையம் ‌- சேரன்‌ நகர் - தண்ணீர் தொட்டி அருகிலும்‌, வார்டு எண்‌.75ல்‌ சீரநாயக்கன் பாளையம்‌ - நேதாஜி வீதி பகுதியிலும்‌, மார்ச் 26அன்று வார்டு எண்‌.38ல் வடவள்ளி பொம்மனாம்பாளையம்‌ மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும் நடைபெறுகிறது.

மேலும், மார்ச் 25 அன்று வார்டு எண்‌.39ல்‌ சுண்டப்பாளையம்‌ பெருமாள்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, மற்றும்‌ 26.03.2023 அன்று வார்டு எண்‌.74ல்‌ பூசாரி பாளையம்‌ - சமுதாய கூடத்திலும்‌ நடைபெறவுள்ளது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.85-ல்‌ குறிச்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்திலும்‌, வார்டு எண்‌.88ல்‌ குனியமுத்தூர்‌ - ரைஸ்‌ மில்‌ ரோடு - மாநகராட்சி உயர்நிலை பள்ளியிலும்‌, வார்டு எண்‌.89ல்‌ சுண்டக்காமுத்தூர்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மற்றும்‌ வார்டு எண்‌.97ல்‌ பிள்ளையார்புரத்தில்‌ நடைபெற உள்ளது.

வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.11ல் எம்‌.ஜி.ஆர்‌. நகா்‌ - ஜனதா நகா்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.15 சுப்ரமணியம் பாளையம்‌- வார்டு அலுவலகம்‌ அருகிலும்‌, வார்டு எண்‌ 18ல்‌ நல்லாம்பாளையம்‌ மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு எண்‌.19ல்‌ மணியகாரம் பாளையம் ‌- அம்மா உணவகம்‌, வார்டு எண்‌.25ல்‌ காந்தி மாநகர்‌ - அரசு மேல்‌நிலை பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்.28ல்‌ காமதேனு நகா்‌ - வார்டு அலுவலகத்திலும்‌ நடைபெற உள்ளது.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.32ல்‌ சிறுவர் பூங்கா, சங்கனூர்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு எண்‌.62 சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு எண்‌.63ல்‌ ஒலம்பஸ்‌ - 80 அடி ரோட்டில்‌ உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலும்‌, வார்டு எண்‌.80ல்‌ கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌.84ல்‌ ஜி.எம்‌. நகரில்‌ உள்ள தாகத்‌ இஸ்லாம்‌ பள்ளியிலும்‌ நடைபெற உள்ளது.

இந்த வார்டுகளில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாநகராட்சியின்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை வழக்கம்போல்‌ செயல்படும்‌. எனவே, பொதுமக்கள்‌ இந்த சிறப்பு வரிவசூல்‌ முகாம்களில்‌, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி மாநகராட்சியின்‌ அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...