கோவை மாநகராட்சியில் வரும் 18, 19-ல் சிறப்பு வரிவசூல் முகாம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

கோவை மாநகராட்சியின் 5, 6, 7, 8, 55, 56, 57, 35, 75, 39, 88, 89, 96, 15, 19, 25, 44, 32, 62, 63, 80, 84, ஆகிய வார்டுகளில் வரும் மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு வரிவசூல் முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் வரும் மார்ச் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சியில்‌ 2022-23ஆம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டு இறுதியான 31.03.2023 வரை கோவை‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ முதலிய அனைத்து நிலுவைகளை செலுத்த பல்வேறு வார்டுகளில் வரும் மார்ச் 18‌ மற்றும்‌ 19 ஆகிய‌ தேதிகளில்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடத்தப்பட உள்ளன.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.5-ல்‌ வலியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.6-ல்‌ வீரியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.7 மற்றும்‌ 8-ல்‌ காளப்பட்டி நேரு நகா்‌ பள்ளியிலும்‌, வார்டு எண்‌.55-ல்‌ எஸ்‌.ஐ.எச்‌.எஸ்‌.காலனி மாநகராட்சி பள்ளியிலும்‌, வார்டு எண்‌.56-ல்‌ சூர்யா நகர்‌ - ரயில்வே கேட்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.57-ல்‌ ஒண்டிபுதூர்‌ நெசவாளர்‌ காலனி பகுதியிலும் வரிவசூல் முகாம்‌ நடைபெற உள்ளது.

இதேபோல், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான வார்டு எண்‌.35-ல்‌ இடையர்பாளையம்‌ - தேவாங்க நகர் - கற்பக விநாயகர் கோவில்‌ வளாகம்‌ மற்றும்‌ வார்டு எண்‌.75-ல்‌ சீரநாயக்கன்பாளையம்‌ - நேதாஜி சாலை - மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும்‌ நடைபெறுகிறது. மேலும்‌, வார்டு 39-ல்‌ 18ஆம் தேதி சனிக்கிழமை வடவள்ளி ஓம்‌ கணேஷ்‌ நகா்‌ சமுதாய கூடத்திலும்‌, 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வடவள்ளி மகாராணி அவென்யூ - மாநகராட்சி பூங்காவிலும்‌ நடைபெறவுள்ளது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.88-ல்‌ சுண்டக்காமுத்தூர் - கங்கா நகர் பகுதியிலும்‌, வார்டு எண்‌.89-ல்‌ சுண்டக்காமுத்தூர்‌ - சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்திலும்‌, மற்றும்‌ வார்டு எண்‌.96-ல்‌ சுந்தராபுரம்‌, தாயம்மாள்‌ லே-அவுட்‌ - குருசாமி பிள்ளை வீதியிலும்‌ நடைபெறவுள்ளது.

வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.15-ல் சுப்ரமணியம் பாளையம் ‌- வார்டு அலுவலகம்‌ அருகிலும்‌, வார்டு எண்‌ 19-ல்‌ மணியகாரம்பாளையம்‌ - அம்மா உணவகம்‌, வார்டு எண்‌.25-ல்‌ காந்தி மாநகர்‌ - அரசு மேல்‌ நிலைப்பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌ 28ல்‌ காமதேனு நகர்‌ - வார்டு அலுவலகத்திலும்‌, வார்டு எண்‌.44-ல்‌ நல்லாம்பாளையம்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளியிலும்‌ நடைபெறவுள்ளது.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.32-ல்‌ சிறுவர் பூங்கா, சங்கனூர்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு எண்‌ 62-ல் சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு எண்‌.63-ல்‌ ஒலம்பஸ் ‌- 80 அடி ரோட்டில்‌ உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலும்‌, வார்டு எண்‌ 80-ல்‌ கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌ 84-ல்‌ ஜி.எம்‌.நகரில்‌ உள்ள தாகத்‌ இஸ்லாம்‌ பள்ளியிலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள்‌ நடைபெற உள்ளது.

மேலும்‌, 31.03.2023 வரை சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ அரசு விடுமுறை நாட்கள்‌ நீங்கலாக ஏனைய நாட்களில்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ வழக்கம் போல்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை செயல்படும்‌. எனவே, பொதுமக்கள்‌ இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தலாம்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...