பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

கோவை வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையத்தை மானிய அடிப்படையில் அமைப்பதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரும் வகையில் பல்வேறு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது பராமரிப்பு மையத்தை மானியம் மூலம் அமைத்து தரும் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க தற்பொழுது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த மையங்கள் அமைக்கப்படுவதாகும், தொழில் முனைவோர் விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இந்த மையங்கள் மானியத்தில் அமைத்து தரப்படும் என்றும், இந்த மையங்களை அமைப்பதற்கு எட்டு லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில் இதில் 50 சதவிகிதம் நான்கு லட்சம் ரூபாய் மானிய அடிப்படையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்கள் அமைக்க போதிய இட வசதியும் மும்முனை மின்சார இணைப்பு கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த விவரங்கள் அறிவதற்கு கோவை மாவட்டத்திற்கு 0422-2434838, 0422-2966500 என்ற எண்ணிலும், பொள்ளாச்சி 04259-292271 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...