கோவை வெள்ளியங்கிரி மலையில் வன விலங்கு நடமாட்டம்: மலையேற பக்தர்களுக்கு தடை - வனத்துறை அறிவிப்பு….!

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் உலா வருவதால், மலை ஏற்றதுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


கோவை: கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவை காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையேறி சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்..

குறிப்பாக, பௌர்ணமி மற்றும் திருவிழா காலங்களில் மலை ஏற, பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி மற்றும் சிவராத்திரி போன்ற திருவிழாக் காலங்கள் முடிவுற்ற நிலையல், தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் உலா வருவதால், அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால், வெள்ளிங்கிரி மலை ஏற பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று வனத்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...