புத்தாண்டு கொண்டாட்டம்: கோவையில் விதி மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனா தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதி மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதி மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் சாலைகள், பூங்காக்கள், போன்ற பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், இது போன்ற இதர இடங்களில் 31.12.2021-அன்று இரவு பொதுவாக நடத்தப்படும்.

ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்யும் பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது நோய்த் தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில், நோய்த் தடுப்புப் பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உணவகங்கள் தங்கும் விடுதிகள் கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் 31.12.2021-அன்று இரவு நடத்தப்படும் 2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் மேற்படி நடைமுறைகள் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...