மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடி 89 லட்சத்திற்கு பருத்தி ஏலம்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை நடைபெற்றது. இதில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 14 ஆயிரத்து 214-க்கு பருத்தி ஏலம் விடப்பட்டதாக திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.



திருப்பூர்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.



திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன்படி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7,619க்கும், குறைந்தபட்ச விலை ரூ.6,450-க்கும் விற்பனையானது.

அதன்படி மொத்தம் ரூ.1 கோடியே 89 லட்சத்து 14 ஆயிரத்து 214-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சுரேஷ் பாபு தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter