கோவை வேளாண் பல்கலையில் ஆகஸ்ட் 7-ல் தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை சார்பில். வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ள தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சியில் தேனீக்கள் வளர்க்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில், பூச்சியியல்‌ துறை சார்பாக ஒவ்வொரு மாதமும்‌ தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்டு மாதத்திற்கான பயிற்சி வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் இடம்பெற்றுள்ள‌ முக்கிய அம்சங்கள்‌:-

*தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல்‌

*பெட்டிகளில்‌ தேனீ வளர்க்கும்‌ முறை மற்றும்‌ நிர்வாகம்‌

*தேனீக்கு உணவு தரும்‌ பயிர்கள்‌ மற்றும்‌ மகரந்த சேர்க்கை மூலம்‌ மகசூல்‌ அதிகரிக்கும்‌ பயிர்களின்‌ விவரம்‌

*தேனைப்‌ பிரித்தெடுத்தல்‌

*தேனீக்களின்‌ இயற்கை எதிரிகள்‌ மற்றும்‌ நோய்‌ நிர்வாகம்‌

ஆகியவை தொடர்பான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வழங்கப்படும்.

இந்த பயிற்சியில்‌ கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள்‌, பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்குதமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின் பூச்சியியல்‌ துறையில் நேரடியாக தங்களது அடையாள சான்றுகளை சமர்ப்பித்து, பயிற்சிக்‌ கட்டணம்‌ ரூ.590/- (ரூபாய்‌ ஐநூற்று தொண்ணூறு மட்டும்‌) நேரடியாக செலுத்த வேண்டும்‌.

இந்த பயிற்சியானது காலை 9.00 முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சியின்‌ இறுதியில்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌.

மேலும்‌ விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

வேளாண்‌ பூச்சியியல்‌ துறை,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‌ கழகம்‌,

கோயம்புத்தூர்‌ தொலைபேசி: 0422-6611214மின்னஞ்சல்‌: [email protected].

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter