அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.5 லட்சம் மக்காச்சோளம் ஏலம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 4.5 லட்சத்துக்கு மக்காச்சோளம் மறைமுக ஏலம் மூலம் விற்பனையானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த திருப்பூர் விற்பனை குழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதற்காக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் 22,344 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதை வாங்குவதற்காக நடத்தப்பட்ட மறைமுக ஏலகத்தில் பங்கேற்க திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். மக்காச்சோளம், அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ. 2,056க்கும், குறைந்தபட்சமாக ரூ.2007 க்கும் விலைபோனது.

அதன்படி மொத்தமாக ரூ.4,54,028-க்கு மக்காச்சோளம் விற்பனையானது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter