தமிழகத்திற்கு தேவையான 70 சதவீத நெல் விதைகள் தாராபுரத்தில் உற்பத்தி செய்து விநியோகம்!

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை சார்பில் விதை நெல் உற்பத்தியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் தாராபுரம் அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விதை உற்பத்தியாளர்கள், விதை சான்று அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது என விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இணை இயக்குனர் ஜெய செல்வின் இன்பராஜ் தெரிவித்துள்ளார்.

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை சார்பில் விதை நெல் உற்பத்தியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் தாராபுரம் அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் தலைமை தாங்கி பேசியதாவது,

தமிழ்நாட்டிற்கு தேவையான 70 சதவீத நெல் விதைகள் தாராபுரம் பகுதியில் இருந்து உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படுகிறது.

தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடமை உற்பத்தியாளர்களுக்கு உள்ளது.தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து உற்பத்தியாளர்கள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் தரமான விதை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் அங்ககச் சான்று மற்றும் அங்க விவசாயம் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் விதை உற்பத்தியாளர் தரப்பில் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தாராபுரம் பகுதிக்கு புதிதாக 3 விதை சான்று அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.

மேலும் சான்று பணிக்கு தேவையான சான்று அட்டைகளை தேவைக்கேற்ப முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து விதை உற்பத்தியாளர்கள், விதை சான்று அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விதை சான்று அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Newsletter