கொத்தமல்லி செடியில் நோய் தாக்குதல் எதிரொலி - விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு!

உடுமலை அருகே தழைக்காக பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லி செடிகள் அதிக வெப்பம் மற்றும் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே தழைக்காக பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லி செடிகள் வெப்பம் மற்றும் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில், விதை தேவைக்காக, மானாவாரியாக கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.



பின்னர், வீரிய ரக விதைகள் அறிமுகமாகி, சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி தழை தேவைக்காக கிணற்றுப்பாசனத்தில், இச்சாகுபடி பரப்பு அதிகரித்தது.

பண்டிகை மற்றும் முகூர்த்த சீசனில், கொத்தமல்லி தழைக்கு கிராக்கி அதிகமிருக்கும். இதனால், ஏக்கருக்கு, 7 - 10 டன் வரை விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தழைக்காக பயிரிடும் போது, செடிகள் நெருக்கமாக இருக்கும் வகையில் பராமரிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சீசனில், அதிக வெயில் உட்பட காரணங்களால், கொத்தமல்லி செடிகள் முளைப்புத்திறன் பாதிக்கப்பட்டது.

இதனால், கொத்தமல்லி தழை அறுவடை குறைந்து, வருவாய் குறைந்து உள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter