அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.72 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் - விவசாயிகள் மகிழ்ச்சி!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 12,304 கிலோ மக்காச்சோளத்தை திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கொண்டு வந்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.2.72 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


திருப்பூர்: அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2.72 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் போனது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதற்காக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 12,304 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,219-ம் குறைந்த பட்சமாக ரூ.2,215க்கும் விலை போனது. இதன் மூலம் மொத்தமாக ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்துக்கு மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மேற்பார்வையாளர் அருண்குமார் செய்திருந்தார்.

Newsletter