கோவை வேளாண் பல்கலையில் செயல் திட்டங்கள்‌ தயாரிப்பு பற்றிய கூட்டம்‌

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி வேளாண்மை அறிவியல்‌ நிலைய ஆண்டு செயல்திட்டங்கள்‌ தயாரிப்பு பற்றிய கூட்டம்‌ கடந்த 29ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 33 வேளாண்‌ அறிவியல்‌ நிலையங்களிலிருந்து 80-க்கும்‌ அதிகமான விஞ்ஞானிகள்‌ பங்கேற்கின்றனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி வேளாண்மை அறிவியல்‌ நிலைய ஆண்டு செயல் திட்டங்கள்‌ தயாரிப்பு பற்றிய கூட்டம்‌ தொடங்கியது.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ வேளாண்‌ தொழில்நுட்ப முகமை மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, 10ஆவது மண்டலம்‌, ஐதராபாத்‌ இணைந்து தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி வேளாண்மை அறிவியல்‌ நிலைய ஆண்டு செயல்திட்டங்கள்‌ தயாரிப்பு பற்றிய கூட்டம்‌ கடந்த 29ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின்‌ துவக்கவிழா நிகழ்ச்சியானது நேற்று தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரியில்‌ உள்ள 33 வேளாண்‌ அறிவியல்‌ நிலையங்களில் இருந்து 80-க்கும் அதிகமான தலைவர்களும்‌ மற்றும்‌ தொழில்நுட்ப வல்லுநர்களும்‌ கலந்து கொண்டுள்ளனர்.



இவ்வருடாந்திர கூட்டத்தைத் தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்து காலநிலை மாற்றத்தின்‌ முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறினார்.

அதில், இப்பல்கலைக் கழகமானது வேளாண்‌ பெருமக்களின்‌ பயிர்‌ சாகுபடி பிரச்னைகளைக் களைவதில்‌ முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. முக்கியமாக, வேளாண்‌ அறிவியல்‌ நிலைய விஞ்ஞானிகளின்‌ மூலமாக வேளாண்‌ பெருமக்களை அவரது வயல்களிலே சென்று பயிர்‌ சாகுபடி பிரச்னைகளுக்கு உதவி செய்வதாக தெரிவித்தனர்.

Newsletter