உடுமலை பகுதி விவசாயிகள் கவனத்திற்கு..! - வேளாண்மை உழவர் நலத்துறை முக்கிய அறிவிப்பு

உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தானியங்கள் உலர்த்தவும், மழைக்காலங்களில் அறுவடை செய்த தானியங்களை மூடி பாதுகாக்கவும், 50 சதவீதம் மானிய விலையில் கிடைக்கும் தார்பாய்களை விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தானியங்கள் உலர்த்தவும், மழைக்காலங்களில் அறுவடை செய்த தானியங்களை மூடி பாதுகாக்கவும் தார்பாய்கள் 50% மானிய விலையில் விற்பனைக்கு தயாராக உள்ளது.

தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை நகல், கைபேசி எண் கொண்டு வந்து கொடுத்து வாங்கி பயன்படுத்தவும். மேலும் பேட்டரி ஸ்பிரேயர், சிறு குறு விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் தொகுப்பு 50% மானியத்தில் கிடைக்கும்.

இதைதவிர கடப்பாரை-1, மண்வெட்டி-1, களைகொத்து-1, கதிர்அருவாள்-2, மண் அள்ளும் சட்டி-1 இவை அனைத்தும் மானிய விலையில் கிடைக்கும். காலம் தாழ்த்தாது உடனே வந்து வாங்கிப் பயன்படுத்த வேளாண்மை உழவர் நலத்துறை கேட்டுக்கொள்ளப்படுகிறது என உடுமலை வட்டார வேளாண்மை அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவலுக்கு உதவி அலுவலர் அமல்ராஜ் என்பவரை கிழ்கண்ட 97512-93606 தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter