மக்காச்சோளத்திற்கான கோவை வேளாண் பல்கலையின்‌ விலை முன்னறிவிப்பு வெளியீடு

வேளாண் பல்கலையின் விலை முன்னறிவிப்பின் படி தரமான மக்காச்சோளத்தின்‌ பண்ணை விலையானது மார்ச்‌ முதல்‌ ஏப்ரல்‌ வரை குவிண்டாலுக்கு ரூ.2,000 முதல்‌ ரூ.2,200 ஆக இருக்கும்‌ என்றும் விவசாயிகள் இதனடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்க அறிவுரை.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பாசன விவசாய திட்டத்தின் படி மக்காச்சோளத்திற்கான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழத்தில்‌ , வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டதின்‌ விலை முன்னறிவிப்பு‌ திட்டமானது மக்காச்சோளத்திற்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

வேளாண்‌ மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ 2வது முன்கூட்டிய மதிப்பீட்டின்‌ படி, 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ மக்காச்சோளமானது இந்தியாவில்‌ சுமார்‌ 9.5 மில்லியன்‌ ஹெக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 33.62 மில்லியன்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படும்‌ என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில்‌ கர்நாடகா, மத்திய பிரதேசம்‌, மகாராஷ்டிரா, பீகார்‌, தெலங்கானா மற்றும்‌ ஆந்திர பிரதேசம்‌ ஆகிய மாநிலங்கள்‌ மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன. இந்தியா 2020-21 ஆம்‌ ஆண்டு (அக்டோபர்‌ 2021 - செப்டம்பர்‌ 2022), 3.43 மில்லியன்‌ மெட்ரிக்‌ டன்‌ மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இதுமுந்தைய ஆண்டில்‌ 370 மில்லியன்‌ மெட்ரிக்‌ டன்னாக இருந்தது.

இந்திய மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்வதில்‌ வங்கதேசம்‌ முதலிடத்திலும்‌ அதைத்‌ தொடர்ந்து நேபாளம்‌ மற்றும்‌ வியட்‌நாம்‌, மலேசியா மற்றும்‌ தாய்லாந்து ஆகிய நாடுகளும்‌ உள்ளன.

தமிழ்நாட்டில்‌ 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ 4 லட்சம்‌ ஹெக்டர்‌ பரப்பளவில்‌ 25.64 லட்சம்‌ டன்கள்‌ மக்காச்சோளம்‌ உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில்‌ பெரம்பலூர்‌, சேலம்‌, திண்டுக்கல்‌, மதுரை, திருப்பூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ அதிகளவில்‌ மக்காச்சோளம்‌ பயிரிடப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்‌ படி , தமிழ்நாட்டிற்கு மக்காச்சோளத்தின்‌ வரத்தானது ஆந்திர பிரதேசம்‌, கர்நாடகா மற்றும்‌ பீகார்‌ ஆகிய மாநிலங்களிலிருந்து வருகிறது. இம்மூன்று மாநிலங்கள்‌ தமிழ்‌ நாட்டின்‌ மக்காச்சோள தேவையை 30 சதவீதம்‌ பூர்த்தி செய்கின்றன. கோழி மற்றும்‌ கால்நடை தீவனத்திற்கான ஏற்றுமதி மற்றும்‌ உள்நாட்டு தேவைகள்‌ அதிகரிப்பதன்‌ காரணமாக உள்நாட்டு சந்தையில்‌ மக்காச்சோளத்தின்‌ விலை சமீபகாலங்களில்‌ அதிகரித்து காணப்படுகிறது.

விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்‌ நிலவிய மக்காச்சோளம்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளின்‌ அடிப்படையில்‌, தரமான மக்காச்சோளத்தின்‌ பண்ணை விலையானது மார்ச்‌ முதல்‌ ஏப்ரல்‌ வரை குவிண்டாலுக்கு ரூ.2000 முதல்‌ ரூ.2200 ஆக இருக்கும்‌. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய ஆலோசனையின்‌ அடிப்படையில்‌ சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர் - 641003

தொலைபேசி - 0422-2431405

இயக்குனர்‌ மற்றும்‌ முனை அதிகாரி

தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல்‌ திட்டம்‌

நீர் நுட்ப மையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ - 641003

தொலைபேசி - 0422-242278

தொழில்‌ நுட்ப விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

சிறு தானிய துறை

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ - 641003

தொலைபேசி - 0422-2450507

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter