மூலனூரில் முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை வரத்து அதிகரித்துள்ளதால் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரவாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூரில் முருங்கை வரத்து அதிகரித்துள்ளதால் வார சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்பனையானது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த முருங்கைக்காய்களை மூலனூர் மற்றும் கன்னிவாடி பகுதியில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்கின்றனர்.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்கி செல்கின்றனர். பின்னர் இது மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளதால், கடந்த இரண்டு வாரங்களாக விலை உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ரூ70-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய், இந்த வாரம் ரூ.80- கொள்முதல் செய்யப்பட்டது. விலை உயரத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter