தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் களப் பயிற்சி

கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற ஒரு நாள்‌ களப்‌ பயிற்சியில் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு, விஞ்ஞானிகள் மற்றும் வல்லுனர்களுடன் கலந்துரையாடி, பஞ்சகவ்யம் செய்யும் பயிற்சியையும் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி, ஒரு நாள் களப்பயிற்சி நடைபெற்றது.

இதுதொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தேசிய விவசாயிகள்‌ தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கஜானந்தா அறக்கட்டளையும்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‌ கழகமும்‌ இணைந்து மாதம்பட்டியில்‌ அங்கக மற்றும்‌ இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் களப்பயிற்சி மற்றும்‌ செயல்‌ விளக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது

ஏறக்குறைய 132 விவசாயிகள்‌, கிராமப்புற இளைஞர்கள்‌, பெண்‌ விவசாயிகள்‌ மற்றும்‌ கல்லூரி மாணவர்கள்‌ இந்த பயிற்சியில்‌ பங்கேற்றனர்‌.



கெளரவ விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள்‌‌, பயிற்சியாளர்களுக்கு இயற்கை விவசாய முறைகள்‌ குறித்து சிறப்புரை ஆற்றினார்‌.

அவரை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ மேலாண்மை இயக்குனர்‌ முனைவர்‌ எம்‌.கே.கலாராணி பயிற்சியாளர்களை பாராட்டி, மனிதநலம்‌ மற்றும்‌ மண்‌ ஆரோக்கியம்‌ காக்க விவசாயிகளை இயற்கை வேளாண்மையை நோக்கி மாறுவது குறித்து ஆலோசனைகள்‌ வழங்கி ஊக்குவித்தார்‌.

தொடர்ந்து பேசிய நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌. ரா. கிருஷ்ணன்‌, அங்கக மற்றும்‌ இயற்கை வேளாண்மையின்‌ நோக்கம்‌ மற்றும்‌ முக்கியத்துவம்‌ குறித்து விளக்க உரை ஆற்றினார்‌.

இதனிடையே விஞ்ஞானிகள்‌ முனைவர்‌௭.பரமேஸ்வரி, முனைவர்‌ மா.சுகந்தி மற்றும்‌ முனைவர்‌ பெ.௪.கவிதா ஆகியோர்‌ அங்கக இடுபொருட்கள்‌ தயாரிப்பு, அங்கக மற்றும்‌ இயற்கை வேளாண்மையில்‌ பூச்சி மற்‌றும் நோய்‌ மேலாண்மை மற்றும்‌ அங்கக மாடித்‌ தோட்டம்‌ குறித்த தொழில்நுட்ப உரைகளை வழங்கினர்‌.

அங்கக மற்றும்‌ இயற்கை வேளாண்மையில்‌ பயன்படுத்தப்படும்‌ பல்வேறு அங்கக இடுபொருட்கள்‌, நுண்ணுயிர்‌ உரங்கள்‌, பூச்சி மேலாண்மையில்‌ பயன்படுத்தப்படும்‌ பொறிகள்‌, உயிரியல்‌ பூச்சி மேலாண்மையில்‌ பயன்படுத்தப்படும்‌ ஒட்டுண்ணிகள்‌, இரை விழுங்கிகள்‌ மற்றும்‌ உயிரியல்‌ பூச்சி மற்றும்‌ பூஞ்சாண கொல்லிகள்‌ போன்றவை உழவர்கள்‌ பயன்‌ பெறுமாறு கண்காட்சியில்‌ பார்‌வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே விவசாயிகள்‌ மற்றும்‌ விஞ்ஞானிகளின்‌ கலந்துரையாடல்‌ நிகழ்ச்சியும்‌ நடைபெற்றது. மேலும்‌, கிராம தங்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ நான்காம்‌ ஆண்டு இளநிலை தோட்டக்கலை பயிலும்‌ மாணவர்கள்‌ இப்பயிற்சியில்‌ பங்கேற்றதுடன்‌, விஞ்ஞானிகளுடன்‌ இணைந்து பஞ்சகவ்யம்‌ தயார்‌ செய்வது குறித்து விவசாயிகளுக்கும்‌ கல்லூரி மாணவர்களுக்கும்‌ செயல்முறை விளக்கத்தினை செய்து காட்டினர்‌.

இவ்வாறு வேளாண் பல்கலைக்கழத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter