தக்காளி, வெண்டை, கத்தரி காய்களுக்கு தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்ட விலை முன்னறிவிப்பு வெளியீடு

விலை முன்னறிவிப்பின் படி, தரமான தக்காளியின்‌ பண்ணை விலை கிலோ ரூ.21-ரூ.23, நல்ல தரமான கத்திரிக்காய்‌ விலை ரூ.23-ரூ.25 மற்றும்‌ தரமான வெண்டைக்காய்‌ விலை ரூ.22-ரூ.24 வரை ஆக இருக்கும் என அறிவிப்பு.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இயங்கி வரும் பாசன விவசாய மேம்பாட்டு திட்ட விலை முன்னறிவிப்பு திட்டத்தின் கீழ் தக்காளி, வெண்டை, கத்திரிக்காய் ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வெளியிடப்பட்டுள்ள விலை முன்னறிவிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விவசாயிகள்‌ தங்கள்‌ நடவு முடிவுகளை மேற்கொள்வதற்கு எதுவாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, தக்காளி, கத்திரி மற்றும்‌ வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வழங்குகிறது.

தக்காளி, கத்திரிக்காய்‌ மற்றும்‌ வெண்டைக்காய்‌ உற்பத்தி மற்றும்‌ பயன்பாட்டில்‌ தமிழகம்‌ முக்கிய இடம்‌ வகிக்கின்றது. இந்த காய்கறிகளுக்கான அறுவடைக்கு முந்தைய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி

வேளாண்‌ மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி (2021-22) தமிழகத்தில்‌ சுமார்‌ 0.54 லட்சம்‌ ஹெக்டர்‌ பரப்பில்‌ தக்காளி பயிரிடப்பட்டு 1,617 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ கிருஷ்ணகிரி, நாமக்கல்‌, தர்மபுரி, திண்டுக்கல்‌, தேனி மற்றும்‌ திருப்பூர்‌ ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌. தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு தக்காளி அதன்‌ சுற்றுவட்டார கிராமங்களான கிணத்துக்கடவு, சாவடி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர்‌, பெரியநாயக்கன்பாளையம்‌, உடுமலைபேட்டை மற்றும்‌ கர்நாடக மாநிலம்‌ மைசூர்பசுதி யிலிருந்து வருகிறது.

வர்த்தக மூலங்களின்படி, கடந்த பருவத்தின்‌ விலை குறைவு காரணமாகவும்‌, பருவமழை மற்றும்‌ காலநிலை மாற்றத்தினாலும்‌ தக்காளியின்‌ வரத்து குறைவாக இருப்பதால்‌ பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறியப்படுகிறது.

கத்திரிக்காய்

வேளாண்மை மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), 0.24 லட்சம்‌ ஹெக்டர்‌ பரப்பளவில்‌ கத்திரி பயிரிடப்பட்டு 312 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.

தமிழகத்தில்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ வேலூர்‌ஆகிய மாவட்டங்களில்‌ கத்திரி அதிக அளவில்‌ உற்பத்தி செய்யபடுகின்றது.

வர்த்தக மூலங்களின்படி, தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம்‌, குப்பனூர்‌, தொண்டாமுத்தூர்‌, போளுவாம்பட்டி மற்றும்‌ கர்நாடக மாநிலம்‌ மைசூரிலிருந்து வருகின்றது.

வெண்டைக்காய்

வேளாண்மை மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), 0.25 லட்சம்‌ ஹெக்டர்‌ பரப்பளவில்‌ வெண்டைக்காய் பயிரிடப்பட்டு 214 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.

தமிழகத்தில்‌, சேலம்‌, தேனி, தர்மபுரி, திருவள்ளூர்‌, கோயம்புத்தூர்‌, மதுரை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்‌ வவண்டைஅதிக அளவில்‌ உற்பத்தி செய்யப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்படி, தற்போது, கோயம்புத்தூர்‌ சந்தைக்கு, வெண்டை வரத்தானது மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம்‌, குப்பனூர்‌, தொண்டாமுத்தூர்‌ மற்றும்‌ போளுவாம்பட்டி பகுதிகளிலிருந்து வருகிறது.

விலை முன்னறிவிப்பு திட்டக்குழு ,ஒட்ட ன்சத்திரம்‌ மற்றும்‌ கோயம்பத்தூர்‌ சந்தையில்‌ கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும்‌ வெண்டை விலையில்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

பொருளாதார ஆய்வு முடிவின்படி, அறுவடையின்‌ போது (மார்ச்‌ - எப்ரல்‌ 2023) தரமான தக்காளியின்‌ பண்ணை விலை கிலோவிற்கு ரூ.21 முதல்‌ ரூ.23 வரை, நல்ல தரமான கத்திரியின்‌ விலை ரூ.23 முதல்‌ ரூ.25 ஆகவும்‌ மற்றும்‌ தரமான வெண்டையின்‌ விலை ரூ.22 முதல்‌ ரூ.24 வரை ஆகவும் இருக்கும்‌ என்று அறியப்படுகிறது.

மேலும்‌ நீடிக்கும்‌ பருவ மழையினால்‌ சந்தைக்கு வரத்து குறையும்‌ என்பதினால்‌ விலை உயரும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள்‌ அதற்கேற்ப சந்தை முடிவு எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

மேலும்‌ விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தை தகவல்‌ மையம்‌,

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌- 641003.

தொலைபேசி - 0422 - 243140,




இயக்குனர்‌ மற்றும்‌ முனை அதிகாரி

தமிழ்நாடு நீர்வள நிலவளத்‌ திட்டம்‌

நீர்‌ நுட்ப மையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌-641003

தொலைபேசி - 0422-6611278

தொழில்‌ நுட்ப விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

காய்கறிப்‌ பயிர்கள்‌ துறை

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌-641003

தொலைபேசி-0422-6611374

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter