தமிழ்நாடு வேளாண் பல்கலை.-யில்‌ காளான், முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ 2 நாள் பயிற்சி..!

செப். 13, 14ஆம் தேதிகளில் வழங்கப்படும் பயிற்சியில், முருங்கையில் இருந்து முருங்கை பொடி, பிஸ்கட்‌, அடை மிக்ஸ் மற்றும் காளானில் இருந்து காளான்‌ பொடி, சூப்‌ மிக்ஸ், பிஸ்கட்‌, ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு.



கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ வரும் 13, 14ஆம் தேதிகளில் காளான் மற்றும்‌ முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌கழகத்தில்‌ வரும் 13.9.2022 மற்றும்‌ 14.9.2022 ஆகிய 2 நாட்கள், காளான்‌ மற்றும்‌ முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

1) முருங்கையில் இருந்து முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார்‌ பொடி, பிஸ்கட்‌, அடை மிக்ஸ்‌, ஊறுகாய் மற்றும் நூடுல்ஸ் ஆகியவை செய்யும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

2) காளானில் இருந்து காளான்‌ பொடி, சூப்‌ மிக்ஸ், பிஸ்கட்‌, ஊறுகாய், பிழிதல்‌ தொழில்நுட்பம்‌ உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சிகள் மிகவும் எளிமையான முறையில்‌ தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் மற்றும் தொழில்நுட்பத்தை கற்க விரும்பும் தனி நபர்கள் , தொழில்முனைவோர்‌ என அனைவரும் ரூ.1770-ஐ (ரூ.1,500 + 18% GST )செலுத்தி தங்களது‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

*பயிற்சி நடைபெறும்‌ இடம்‌*

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி! மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

*பேருந்து நிறுத்தம்‌*

வாயில்‌ எண் -‌ 7, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 647 003

*மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி*

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌- 641 003

தொலை பேசி எண்‌ - 0422 -6611268

Newsletter