கோவை TNAU-வில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி: தொழில் முனைவோருக்கு அழைப்பு..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 11.08.2022 மற்றும் 12.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் அளிக்கப்பட உள்ளது.


கோவை: நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை நடத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் இணைந்து இதில் பயன் பெறலாம் என்றார்.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 11.08.2022 மற்றும் 12.08.2022 ஆகிய நாட்களில்‌ நடைபெறும்‌ கீழ்கண்ட தலைப்புகளில்‌ பயிற்சி வழங்கப்படும்‌.

• நெல்லி பானங்கள்‌ - பழரச பானம்‌ மற்றும்‌ தயார்‌ நிலை பானம்‌

•நெல்லி ஜாம்‌

• தேன்‌ நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய்‌, பொடி மற்றும்‌ துருவல்‌

• தொழில்‌ தொடங்குவதற்கான உரிமம்‌ பெற்றுக்‌ கொள்ளுவதற்குரிய வழிமுறைகள்‌

ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1770 (ரூ.1500+GST 18%) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌‌:-

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோவை‌- 641 003.

பேருந்து நிறுத்தம்‌:-

வாயில்‌ எண்‌.7, தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லாரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌கழகம்‌,

கோயம்புத்தூர்‌ தொலைபேசி எண்‌: 0422-6611268.

Newsletter