கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ வாழைக்கான விலை முன்னறிவிப்பு..!

ஆய்வு முடிவுகளின்‌ அடிப்படையில்‌, ஆகஸ்ட்‌- செப்டம்பர்‌ 2022 முடிய தரமான பூவன்‌ வாழையின்‌ பண்ணை விலை ரூ.17 முதல்‌ 18, கற்பூரவள்ளி ரூ.20 முதல்‌ 22 மற்றும்‌ நேந்திரன்‌ விலை ரூ.38 முதல்‌ 40 வரை இருக்கும்‌ எனக்‌ கணிக்கப்பட்டுள்ளது.


கோவை‌‌: தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்பு திட்டமானது, பூவன்‌, கற்பூரவள்ளி மற்றும்‌ நேந்திரன்‌ ஆகிய வாழை இரகங்களுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

வேளாண்‌ மற்றும்‌ உழவர்‌ நல அமைச்சகத்தின்‌ இரண்டாவது முன்‌ கூட்டிய அறிக்கையின்‌ படி, 2021-22 ஆம்‌ ஆண்டு இந்தியாவில்‌, வாழை 9.59 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ சாகுபடி செய்யப்பட்டு 351.31 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தியாகும்‌ என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில்‌ ஆந்திரப் பிரதேசம்‌ (11%), மகாராஷ்டிரா (13%), கர்நாடகா (11), குஜராத்‌ (11%), தமிழ்நாடு(11%) மற்றும்‌ உத்திரபிரதேசம்‌ (11%) ஆகியவை வாழையைப் பயிரிடும்‌ முக்கிய மாநிலங்களாகும்‌.

தமிழகத்தில்‌ பொதுவாக தேனி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர்‌, திருச்சி, திருநெல்வேலி மற்றும்‌ தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்‌ வாழை அதிகளவில்‌ பயிரிடப்படுகிறது. இப்பகுதியில்‌ பூவன்‌, கற்பூரவள்ளி மற்றும்‌ நேந்திரன்‌ ஆகிய இரகங்கள்‌ அதிகளவு பயிரிடப்படுகின்றன. இவற்றில்‌, பூவன்‌ மற்றும்‌ கற்பூரவள்ளி ஆகியவை இலை நோக்கத்திற்காகவும்‌ பயிரிடுகின்றனர்‌.

கோயம்புத்தூர்‌ சந்தைக்கு, புதுகோட்டை, திருவையாறு மற்றும்‌ கடலூர்‌ ஆகிய பகுதிகளிலிருந்து பூவன்‌ வரத்தும்‌, சத்தியமங்கலம்‌, கோபிசெட்டிபாளையம்‌ மற்றும்‌ மேட்டுப்பாளையம்‌ ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும்‌, நேந்திரன்‌ மேட்டுப்பாளையத்திலிருந்தும்‌ வருகின்றன. மேலும்‌, கேரளாவிலிருந்து வரும்‌ நேந்திரன்‌ வரத்தானது ஆகஸ்ட், 2022 முதல்‌ வரத்‌ தொடங்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில்‌, விவசாயிகள்‌ விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக விலை முன்னறிவிப்பு குழு, கடந்த 17 ஆண்டுகளாக கோயம்புத்தூர்‌ சந்தைகளில்‌ நிலவிய பூவன்‌, கற்பூரவள்ளி மற்றும்‌ நேந்திரன்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகளின்‌ அடிப்படையில்‌, ஆகஸ்ட்‌- செப்டம்பர்‌ 2022 முடிய தரமான பூவன்‌ வாழையின்‌ பண்ணை விலை ரூ.17 முதல்‌ 18, கற்பூரவள்ளி ரூ.20 முதல்‌ 22 மற்றும்‌ நேந்திரன்‌ விலை ரூ.38 முதல்‌ 40 வரை இருக்கும்‌ எனக்‌ கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில்‌ விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

௮) உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌-641 003.

தொலைபேசி -0422-2431405

ஆ) இயக்குனர்‌ மற்றும்‌ முனை அதிகாரி

தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல்‌ திட்டம்‌,

நீர்‌ நுட்ப மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌-641 003.

தொலைபேசி -0422-6611278

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

பழப்பயிர்கள்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி எண் - 0422-6611269

Newsletter