தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ மாநில அளவிளான வேளாண் விரிவாக்க அலுவளர்களுக்கு அங்கக வேளாண்மை பயிற்சி..!

பயிற்சியில்‌ அங்கக பயிர்‌ மேலாண்மை, களை மேலாண்மை, பூச்சி மற்றும்‌ நோய்‌ மேலாண்மை, அங்கக சான்றளிப்பு, பங்கேற்பாளர்கள்‌ உறுதியளிப்பு திட்டம்‌ மற்றும்‌ அங்கக இடுபொருட்கள்‌ உற்பத்தி மற்றும்‌ பயன்பாடு பற்றிய செய்முறை விளக்கங்களும்‌ வழங்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்‌ 28.4.2022 அன்று தமிழக முதலமைச்சரால்‌ துவக்கிவைக்கப்பட்டது.

இம்மையமானது இயற்கை மற்றும்‌ அங்கக வேளாண்மையில்‌ ஆராய்ச்சி, கல்வி மற்றும்‌ விரிவாக்கம்‌ ஆகிய மூன்று முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இதன்‌ ஒரு பகுதியாக தமிழ்நாடு வேளாண்‌ விரிவாக்க அலுவலர்களுக்கு மூன்று நாள்‌ பயிற்சி முகாம்‌ ஜுலை 11ம்‌ நாள்‌ முதல்‌ 13ம்‌ நாள்‌ வரை நடைபெற்றது.



இவ்விழாவிற்கு தலைமையேற்று தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌. வெ. கீதாலஷ்மி விழாப்பேருரையில்‌ ஆற்றி இயற்கை வேளாண்மையின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்‌. இவ்விழாவில்‌ முனைவர்‌. எம்‌.கே. கலாராணி, இயக்குனர்‌, பயிர்‌ மேலாண்மை இயக்ககம்‌ மற்றும்‌ வேளாண்‌ விரிவாக்க இயக்குனர்‌ முனைவர்‌. பி. பொ. முருகன்‌ அவர்களும்‌ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்‌.

இப்பயிற்சியில்‌ தமிழகத்தின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ இருந்து 30 வேளாண்‌ விரிவாக்க அலுவலர்கள்‌ கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்‌. பயிற்சியில்‌ அங்கக பயிர்‌ மேலாண்மை, களை மேலாண்மை, பூச்சி மற்றும்‌ நோய்‌ மேலாண்மை, அங்கக சான்றளிப்பு, பங்கேற்பாளர்கள்‌ உறுதியளிப்பு திட்டம்‌ மற்றும்‌ அங்கக இடுபொருட்கள்‌ உற்பத்தி மற்றும்‌ பயன்பாடு பற்றிய செய்முறை விளக்கங்களும்‌ வழங்கப்பட்டது.

அங்கக பயிர்‌ உற்பத்தி செய்யும்‌ விவசாயிகளின்‌ வயல்வெளிகளுக்கும்‌ வேளாண்‌ அலுவலர்கள்‌ அழைத்துச்‌ செல்லப்பட்டனர்‌. மேலும்‌ இது போன்ற நான்கு பயிற்சிகள்‌ இனி வரும்‌ காலங்களில்‌ வேளாண்‌ விரிவாக்க அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில்‌ துறை தலைவர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சி மாணவர்கள்‌ கலந்து கொண்டனர்‌. நிறைவாக பேராசிரியர்‌ இரா.ஜான்சிராணி நன்றியுரையாற்றினார்‌.

Newsletter