கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள்‌ மக்காச்சோளம்‌ விதைப்பு..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோவையில்‌ இளங்கலை (வேளாண்மை) மூன்றாம்‌ ஆண்டு படிக்கும்‌ மாணவர்கள்‌ கிழக்கு பண்ணையில்‌ மக்காச்சோளம்‌ விதைப்பு செய்தனர்‌.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள்‌ மக்காச்சோளம்‌ விதைப்பு செய்தனர்‌.

இளங்கலை (வேளாண்மை) படிக்கும்‌ மாணவர்கள்‌ தாங்கள்‌ முதல்‌ இரண்டு வருடத்தில்‌ படித்த அடிப்படை அறிவியல்‌ தொழில்நுட்பங்களைக்‌ கொண்டு அவர்களாகவே மக்காச்சோளம்‌ பயிரிடவேண்டும்‌. மாணவர்களுக்கு 4 சென்ட்‌ அளவு நிலம்‌ வழங்கப்பட்டுள்ளது.

அதில்‌ அவர்கள்‌ வயலை பண்படுத்துவது முதல்‌ அறுவடை முதலான அனைத்து பணிகளையும்‌ செய்ய வேண்டும்‌. மக்காச்சோளம்‌ விதைப்பு கிழக்கு பண்ணையில்‌ 12.07.2022 அன்று நடைபெற்றது. காலை 6.30 மணியளவில்‌ 135 மாணவர்கள்‌ விதைப்பு பணியைச் செய்ய துவங்கினர்‌.



துவக்க விழாவில்‌ கலந்து கொண்ட பல்கலைக்கழக உயர்‌அதிகாரிகள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவர்களைப் பேராசிரியர்‌ முனைவர்‌. R. கல்பனா வரவேற்றார்‌. முனைவர்‌ S. பன்னீர்செல்வம்‌, பேராசிரியர் மற்றும்‌ தலைவா்‌, உழவியல்‌ துறை மாணவர்கள்‌ மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள்‌ குறித்து விளக்கம்‌ அளித்தார்‌.

முனைவர்‌ N. வெங்கடேசபழனிசாமி, முதன்மையர்‌ (வேளாண்மை) நடவு விழாவை துவக்கி வைத்தார்‌. முனைவர்‌ M.K. கலாராணி, இயக்குநர்‌ (பயிர்‌ மேலாண்மை இயக்குநரகம்‌), முனைவர்‌. E. சோமசுந்தரம்‌ (வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககம் மற்றும்‌ முனைவர்‌. N. மரகதம்‌, முதன்மையா்‌ (மாணவர்‌ நல இயக்ககம்)‌ மாணவர்களுடன்‌ கலந்துரையாடினார்கள்‌. பின்பு பல்கலைக்கழக உயர்‌அதிகாரிகள்‌, பேராசிரியர்கள்‌ வயலில்‌ இறங்கி மக்காச்சோளம்‌ விதைப்பை துவக்கி வைத்தனர்‌.

பேராசிரியர்கள்‌ முனைவர்‌. R. கல்பனா, (முனைவர்‌. S. K. நடராஜன்‌, முனைவர்‌. M. செந்திவேலு, முனைவர்‌. SP. சங்கீதா ஆகியோர்‌ இவ்விழா சிறப்பாக நடைப்பெற ஏற்பாடு செய்தனர்‌.

Newsletter