கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ எண்ணெய்‌ வித்துக்களுக்கான விலை முன்னறிவிப்பு..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, எண்ணெய்‌ வித்துக்களுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ எண்ணெய்‌ வித்துக்களுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, எண்ணெய்‌ வித்துக்களுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிலக்கடலை

நிலக்கடலை முக்கியமான எண்ணெய்வித்துப்‌ பயிர்‌ மறறும்‌ முக்கிய புரத மூலமாகும்‌. வேளாண்‌ மற்றும்‌ உழவர்‌ நல அமைச்சகத்தின்‌ மூன்றாவது முன்‌ கூட்டிய மதிப்பீட்டின்‌ படி, இந்தியாவில்‌ 2021-22, ஆம்‌ ஆண்டு 100.87 இலட்சம்‌ டன்கள்‌ நிலக்கடலை உற்பத்தி செய்யப்படும்‌ எனக்‌ கணித்துள்ளது. குஜராத், ராஜஸ்தான்‌, தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம்‌, கர்நாடகா மற்றும்‌ மத்தியப்பிரதேசம்‌ ஆகிய மாநிலங்கள்‌ இந்திய நிலக்கடலை உற்பத்தியில்‌ 89-சதவீதம்‌ பங்களிக்கின்றன.

தமிழகத்தில்‌ 2020-21, ஆம்‌ ஆண்டில்‌ நிலக்கடலை 4.09 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 10.23 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டது. திருவண்ணாமலை, வேலூர்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, கடலூர்‌, திருப்பத்தூர்‌, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம, நாமக்கல, கிருஷ்ணகிரி மற்றும்‌ தர்மபுரி ஆகியவை நிலக்கடலை பயிரிடும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌. தமிழகத்தில்‌ நிலக்கடலை பெருவாரியான மாவட்டங்களில்‌ ஜுலை முதல்‌ ஆகஸ்ட்‌ (ஆடிப்பட்டம்‌) வரை பயிரிடப்படுகிறது.

விலை முன்னறிவிப்புத்‌ திட்டத்தில்‌, கடந்த 21 ஆண்டுகளாக திண்டிவனம்‌ ஒழுங்குமுறை விற்பனைக்‌ கூடத்தில்‌ நிலவிய நிலக்கடலை விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின்‌ அடிப்படையில், அறுவடையின்‌ போது செப்டம்பர்‌ 2022-ல்‌ தரமான நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 65 முதல்‌ ரூ.70 வரை இருக்கும்‌ எனக்‌ கணிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில்‌, விவசாயிகள்‌ ஆடி பட்டவிதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்‌ படுகின்றனர்‌.

எள்

உலகளவில்‌ எள்‌ உற்பத்தி நுகர்வு மற்றும்‌ ஏற்றுமதி செய்யும்‌ நாடுகளில்‌ இந்தியா முன்னணியில்‌ உள்ளது. வேளாண்‌ மற்றும்‌ உழவர்‌ நல அமைச்சகம்‌, மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்‌ படி 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ இந்தியாவில்‌ எள்‌ 8.57 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படும்‌ எனக்‌ கணித்துள்ளது. மத்தியப்பிரதேசம்‌, மேற்கு வங்காளம்‌, ராஜஸ்தான், உத்திரப்‌ பிரதேசம்‌, குஜராத்‌ மற்றும்‌ தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்‌ எள்‌ பயிரிடப்பட்டு 85 சதவீதம்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ தமிழகத்தில்‌ எள்‌ 0.52 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 0.34 இலட்சம்‌ டன்‌ உற்பத்தி செய்யப்பட்டது. கரூர்‌, ஈரோடு, விழுப்புரம்‌, சேலம்‌, கடலூர், தஞ்சாவூர்‌, திருப்பூர்‌, புதுக்கோட்டை மற்றும்‌ திருவண்ணாமலை எள்‌ உற்பத்தியில்‌ பங்களித்த முக்கிய மாவட்டங்களாகும்‌. தை மற்றும்‌ ஆடி பட்டத்தில்‌ அதிகளவில்‌ எள்‌ விதைப்பு செய்யப்படுகிறது. சிவப்பு மற்றும்‌ கருப்பு எள்‌ வகைகள்‌ எண்ணெய்‌ உற்பத்திக்கும்‌, பழுப்பு (à®…) வெள்ளை எள்‌ மிட்டாய்‌ உற்பத்திக்கும்‌ அதிகளவில்‌ உபயோகிக்கப்படுகிறது.

விலை முன்னறிவிப்புத்‌ திட்டத்தில்‌, கடந்த 21 ஆண்டுகளாக ஈரோட்டில்‌ உள்ள சிவகிரி ஒழுங்கு முறை விற்பனைக்‌ கூடத்தில்‌ நிலவிய எள்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகளின்‌ அடிப்படையில்‌, நல்ல தரமான சிவப்பு எள்ளின்‌ விலை செப்டம்பர்‌ மாதம்‌ ஒரு கிலோவிற்கு ரூ.100 முதல்‌ ரூ.110 இருக்கும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில்‌ விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்‌ படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌

வேளாண் மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்-641 003

தொலைபேசி -0422-2431405

இயக்குனர்‌ மற்றும்‌ முனை அதிகாரி

தமிழ்நாடு நீர்வள நிலவளத்‌ திட்டம்‌

நீர்‌ நுட்ப மையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌-641 003

தொலைபேசி-0422-6611278

தொழில் நுட்ப விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

எண்ணெய்‌ வித்துக்கள்‌ துறை

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌-641 003.

தொலைபேசி- 0422-2450812

Newsletter