உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்து 3 நாட்கள் பயிற்சி!

கோவையில் தமிழ்நாடு வேளாண்‌மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிறிய உணவு பதப்படுத்தும்‌ நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான தொழில்முனைவோர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌ குறித்த மூன்று நாட்கள்‌ பயிற்சியானது தொடங்கப்பட்டது.



கோவை: à®•ோவையில் தமிழ்நாடு வேளாண்‌மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிறிய உணவு பதப்படுத்தும்‌ நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான தொழில்முனைவோர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌ குறித்த மூன்று நாட்கள்‌ பயிற்சியானது தொடங்கப்பட்டது.

சிறிய உணவு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான பிரதம மந்திரி திட்டத்தின்‌ கீழ்‌ தொழில்முனைவோர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌ குறித்து மூன்று நாட்கள்‌ பயிற்சியானது உணவு பதன்‌ செய்‌ பொறியியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனம்‌, கோயம்பத்தூரில்‌ துவக்கப்பட்டது.



முனைவர்‌. எம்‌. பாலகிருஷ்ணன்‌, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, உணவு பதன்‌ செய் பொறியியல்‌ துறை, தமிழ்நாடு முழுவதிலும்‌ இருந்து கலந்து கொண்ட வேளாண்மை மற்றும்‌ வேளாண்‌ வணிகத்‌ துறையின்‌ சார்பில்‌ பயிற்சி பெற்றவர்களை வரவேற்றார்‌.

முனைவர்‌. எ.ரவிராஜ்‌, முதன்மையர்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனம்‌, கோயம்புத்தூர்‌, இத்திட்டத்தின்‌ முக்கிய அம்சங்கள்‌ மற்றும்‌ ஒரு மாவட்டம்‌ ஒரே தயாரிப்பு என்பதன்‌ முக்கியத்துவம்‌ சூறித்து பேசினார்‌.

முனைவர்‌. கே. சோமசுந்தரம்‌, வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்குநரகம்‌, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ தொழில்முனைவு வளர்ச்சியின்‌ கூறுகள்‌ மற்றும்‌ நாட்டிற்கான அதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து பேசினார்‌. முனைவர்‌. பி. பாலாஜி, இணைப்‌ பேராசிரியர்‌, வேளாண்மை வள மேலாண்மைத்‌ துறை, நன்றியுரையாற்றினார்‌.

Newsletter