தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்களுக்கான புத்தாக்கப்‌ பயிற்சி!

விரிவாக்க கல்வி இயக்ககம் மற்றும் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் இணைந்து நடத்தும் 4 நாட்கள் வேளாண்மை தொழில்நுட்பத்தில் புதிய உத்திகள் பற்றி தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்களுக்கான புத்தாக்கப்‌ பயிற்சியின் தொடக்க விழா இன்று நடந்தது.


கோவை: விரிவாக்க கல்வி இயக்ககம் மற்றும் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் இணைந்து நடத்தும் 4 நாட்கள் வேளாண்மை தொழில்நுட்பத்தில் புதிய உத்திகள் பற்றி தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்களுக்கான புத்தாக்கப்‌ பயிற்சியின் தொடக்க விழா இன்று நடந்தது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ விரிவாக்கக்‌ கல்வி இயக்ககம்‌ மற்றும்‌ வேளாண்‌ கூட்டுறவு விற்பனை இணையம்‌ இணைந்து நடத்தும்‌ நான்கு நாட்கள்‌ “வேளாண்மைத்‌ தொழில்நுட்பத்தில்‌ புதிய உத்திகள்‌” பற்றி தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்களுக்கான புத்தாக்கப்‌ பயிற்சியின்‌ துவக்க விழா இன்று நடந்தது.

இவ்விழாவில்‌ சிறப்புரை ஆற்றிய கூட்டுறவு விற்பனை இணையத்தின்‌ கூடுதல்‌ பதிவாளர்‌/மேலாண்‌ இயக்குநர் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம்‌ குமார் அங்கக வேளாண்மை, ட்ரோனின்‌ பங்கு, நீரில்‌ கரையும்‌ உரம்‌, நனோ உரங்கள்‌, குளிர்பதன கிடங்குகள்‌ மற்றும்‌ விதை உற்பத்தி போன்றவற்றின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்‌.

கூடுதல்‌ பதிவாளர்/பொது இயக்குநர், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டம்‌ ஆர்‌.ஜி.சக்தி சரவணன்‌ அவர்கள்‌ தனது உரையில்‌ வேளாண்மையில்‌ புதியத்‌ தொழில்நுட்பங்கள்‌ உழவர்களின்‌ வாழ்வில்‌ முக்கியப்‌ பங்காற்றுகின்றது என்றும்‌, அவற்றின்‌ முக்கியத்துவம்‌ மற்றும்‌ பங்கினை இப்பயிற்சியின்‌ மூலம்‌ வேளாண்மைத்‌ தொழில்நுட்பத்தில்‌ புதிய உத்திகளை அறிந்து இத்ததவல்களை உழவர்களுக்கு பரவலாக்கம்‌ செய்யுமாறு கேட்டுக்‌ கொண்டார்‌.



விரிவாக்கக்‌ கல்வி இயக்குநர் முனைவா்‌ பி.பொ.முருகன்‌ அவர்கள்‌ தனது சிறப்புரையில்‌ இப்புத்தாக்கப் பயிற்சியின்‌ சிறப்புகளை எடுத்து கூறியதோடு, இந்நான்கு நாட்கள்‌ பயிற்சியினை சரியான முறையில்‌ பயன்படுத்தி உழவர்களுக்கு தக்க நேரத்தில்‌ இத்தகவல்களை கொண்டு

சேர்க்குமாறு கேட்டுக்‌ கொண்டார்‌.



வேளாண்‌ ஊரக வளர்ச்சி மைய இயக்குநர் முனைவர் டி.சுரேஷ்‌ குமார்‌ வாழ்த்துரை வழங்கினார்‌.



முனைவர்‌ மு.அசோகன்‌, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவா்‌ பயிற்சிப் பிரிவு அனைவரையும்‌ வரவேற்றார்‌. உதவிப்‌ பேராசிரியர் சி.ஹேமா பாரதி நன்றியுரையாற்றினார்.

Newsletter