பேக்கரி பொருட்கள் மற்றும் சாக்லேட் தயாரிப்பு தொழில் தொடங்க விருப்பமா? பயிற்சிக்கு கோவை த.வே.பல்கலைக்கழகத்தை அணுகுங்கள்..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைப்‌ பொருட்கள்(பேக்கரி), சாக்லேட்டுகள்‌ மற்றும்‌ மிட்டாய்கள்‌ தயாரிக்கும்‌ இரண்டு நாட்கள்‌ பயிற்சி வருகிற 05.04.2022 மற்றும்‌ 06.04.2022 தேதிகளில்‌ நடைபெற உள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைப்‌ பொருட்கள், சாக்லேட்டுகள்‌ மற்றும்‌ மிட்டாய்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌ அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையத்தில்‌, அடுமனைப்‌ பொருட்கள்‌, சாக்லேட்டுகள்‌ மற்றும்‌ மிட்டாய்கள்‌ தயாரிக்கும்‌ இரண்டு நாட்கள்‌ பயிற்சி வருகிற 05.04.2022 மற்றும்‌ 06.04.2022 தேதிகளில்‌ நடைபெற உள்ளது.

அடுமனை உணவுப்‌ பொருட்கள், சாக்லேட்‌ மற்றும்‌ மிட்டாய்‌ வகைகளுக்கு தற்பொழுது மக்கள்‌ மத்தியில்‌, அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக்‌ காரணம்‌ விரும்பத்தக்க வகையிலும்‌ பல்சுவைகளிலும்‌ மிக எளிதில்‌ இவை கிடைப்பதேயாகும்‌. இந்தப்பயிற்சி சிறு தொழில்‌ முனைவோருக்கு தங்களது வருமானத்தைப்‌ பெருக்கப் பெரிதும்‌ உதவியாக இருக்கும்‌. ஆகவே, பயிற்சியின்போது கீழ்க்காணும்‌ அடுமனைப்‌ பொருட்கள்‌, சாக்லேட்‌ மற்றும்‌ மிட்டாய்‌ வகைகள்‌ எளிய முறையில்‌ தயாரிப்பதற்கான தொழிலநுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவையாவன:-

ரொட்டி வகைகள்‌

கேக்‌ மற்றும்‌ பிஸ்கட்‌

சாக்லேட்‌

கடலை மிட்டாய்‌

** சர்க்கரை மிட்டாய்‌ வகைகள்‌

இத்தொழில்நுட்பத்தில்‌ ஆர்வமுள்ள தொழில்முனைவோர்‌ மற்றும்‌ ஏனைய ஆர்வலர்கள்‌ ரூ.1,500 -(ரூ.18-சதவீதம் GST) செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. மேலும்‌ விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்‌ - 0422 - 6611268.

Newsletter