டி.ஏ.பி உரத்திற்குப்‌ பதிலாக விலை குறைந்த சூப்பர்‌ பாஸ்பேட் உரத்தைப்‌ பயன்படுத்தலாம்‌ - வேளாண்மை இணை இயக்குநர்‌ ஆலோசனை..!

சூப்பர்‌ பாஸ்பேட்‌ உரம்‌ உள்நாட்டிலேயே தயார்‌ செய்யப்பட்டு எளிதில்‌ கிடைக்கிறது. சூப்பர்‌ பாஸ்பேட்‌ உரத்தில்‌ கால்சியம்‌ மற்றும்‌ சல்பர்‌ சத்து கூடுதலாகக்‌ கிடைக்கிறது.


கோவை: டி.ஏ.பி உரத்திற்குப்‌ பதிலாக விலை குறைந்த சூப்பர்‌ பாஸ்பேட் உரத்தைப்‌ பயன்படுத்தலாம்‌ என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்‌ இரா.சித்ராதேவி ஆலோசனை தெரிவித்துள்ளார்‌.

சூப்பர்‌ பாஸ்பேட்‌ உரத்தில்‌ 16 சதவீதம்‌ மணிச்சத்து மற்றும்‌ சல்பர்‌, கால்சியம்‌ போன்ற நுண்ணூட்ட உரங்கள்‌ சிறிதளவு உள்ளன. சூப்பர்‌ பாஸ்பேட்‌ உரம்‌ உள்நாட்டிலேயே தயார்‌ செய்யப்பட்டு எளிதில்‌ கிடைக்கிறது. சூப்பர்‌ பாஸ்பேட்‌ உரத்தில்‌ கால்சியம்‌ மற்றும்‌ சல்பர்‌ சத்து கூடுதலாகக்‌ கிடைக்கிறது.

மேலும்‌, நீரில்‌ கரையும்‌ மணிச்சத்து கிடைப்பதால்‌ பயிரின்‌ வளர்ச்சிக்குப்‌ பெரிதும்‌ உதவுகிறது. நிலக்கடலை மற்றும்‌ எள்‌ போன்ற எண்ணெய்வித்துப்‌ பயிர்களுக்கு சல்பர்‌ அதிகம்‌ தேவைப்படுவதால்‌ சூப்பர்‌ பாஸ்பேட்‌ பயன்படுத்துவதன்‌ மூலம்‌ அதிக எண்ணெய்ச்சத்துடன்‌, எண்ணெய்ச்சத்துப்‌ பயிர்களின்‌ மகசூல்‌ அதிகரிக்கிறது.

சூப்பர்‌ பாஸ்பேட்டில்‌ உள்ள பாஸ்பேட்‌ எளிதில்‌ கரையும்‌ உரம்‌ என்பதால்‌ சூப்பர்‌ பாஸ்பேட்‌ எனப்‌ பெயர்‌ பெற்றுள்ளது. எனவே, கோவை மாவட்ட விவசாயிகள்‌ தங்கள்‌ சாகுபடி செய்துள்ள கரும்பு, எண்ணெய்‌ வித்துப்‌ பயிர்களான தென்னை மற்றும்‌ நிலக்கடலை, தோட்டக்கலைக்‌ பயிர்களுக்குத்‌ தேவைப்படும்‌ சூப்பர்‌ பாஸ்பேட்‌ உரத்தினை வாங்கிப்‌ பயன்பெறக்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வளர்ந்த தென்னை மாத்திற்கு யூரியா 1.2 கிலோ கிராம்‌, சூப்பர்‌ பாஸ்பேட்‌ 2 கிலோ கிராம்‌, பொட்டாஷ்‌ 2 கிலோ கிராம்‌ என்ற அளவில்‌ நேரடி உரங்களைப்‌ பயன்படுத்துவதால்‌ உரப்பயன்பாடு அதிகரிக்கிறது. ஒரு மூட்டை சூப்பர்‌ பாஸ்பேட்‌ உரத்தின்‌ விலை ரூ.390.

மேலும்‌, விவசாயிகள்‌ சாகுபடிக்கு முன்னதாக ஒரு ஏக்கருக்கு 300 கிலோ கிராம்‌ மட்கிய தொழுஉரத்துடன்‌ பரிந்துரைக்கப்பட்ட சூப்பர்‌ பாஸ்பேட்‌ உரத்தினை கலந்து 30 நாட்கள்‌ வைத்திருக்க வேண்டும்‌. பின்னர்‌ அதனை அடியுரமாக பயிர்‌ சாகுபடிக்கு முன்‌ இடுவதனால்‌ மணிச்சத்தின்‌ பயன்பாடு அதிகரிக்கிறது.

எனவே, விவசாயிகள்‌ டி.ஏ.பி உரத்திற்குப்‌ பதில்‌ விலை குறைவான சூப்பர்‌ பாஸ்பேட்‌ உரத்தினைப்‌ பயன்படுத்தலாம்‌ என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்‌ இரா.சித்ராதேவி தெரிவித்துள்ளார்‌.

Newsletter