நுண்ணீர் பாசனத் திட்டம்: கிணத்துக்கடவில் ஆவணங்கள் பெறும் சிறப்பு முகாம்!

கோவை: கிணத்துக்கடவில் பாரதப் பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ஆவணங்கள் பெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் பங்கேற்றனர்.


கோவை: கிணத்துக்கடவில் பாரதப் பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ஆவணங்கள் பெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் பங்கேற்றனர்.

பாரதப் பிரதமர் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் கோவை மாவட்டத்தில் இரண்டாயிரத்து 150 ஹெக்கட்டர் பரப்பளவில் மானிய மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.



சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை 75 விழுக்காடு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கான சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று போன்ற ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் கிணத்துக்கடவு, வடசித்தூர், கோவில்பாளையம் பகுதியில் உள்ள நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த முகாமை கிணத்துக்கடவு வட்டாச்சியர் சசிரேகா தொங்கி வைத்தார். கிணத்துக்கடவு உதவி வேளாண்மை அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.



வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, ஆத்மா திட்டம், உழவர் நலத்துறை, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்து சொட்டுநீர் பாசனம் அமைக்க ஆவணங்களை வழங்கினர்.

மேலும் விவசாயிகள் விரும்பும் நிறுவனங்கள் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சொட்டு நீர்ப் பாசனம் மூலம் குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவில் நல்ல மகசூல் பெற உதவியாக இருக்கும் என்று வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter