நெற்பயிர்களைத் தாக்கும் பழ நோய் தடுப்பது எப்படி? வேளாண் பல்கலை. விளக்கம்!

கோவை: நெல் பழ நோயை தடுப்பது எப்படி என்று கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கோவை: நெல் பழ நோயை தடுப்பது எப்படி என்று கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெற்பயிர்களில் ஏற்படும்‌நெல்‌ பழ நோயானது‌ `அஸ்டிலாஜீனாய்டியா வைரஸ்'‌ என்னும்‌ பூஞ்சாணத்தால்‌ உண்டாகிறது. சாதாரணமாக இந்நோய்‌ நெற்கதிரின்‌ ஒருசில நெல்மணிகளில்‌ மட்டுமே‌ தென்படும்‌. இந்நோய்‌ பாதிக்கப்பட்ட நெல்மணிகள்‌ மஞ்சள்‌ நிறமாக மாறி, மிருதுவான பந்து போன்று ஒரு செ.மீ அளவுக்கு வளரும்‌. நெல்‌ மணிகள்‌ முதிர்ச்சியடையும்‌போது, மஞ்சள்‌ நிறம்‌ கரும்‌ பச்சை நிறமாக மாறும்‌. தற்போது, இந்நோய்‌ வேகமாகப் பரவி கணிசமாக மகசூல்‌ இழப்பை ஏற்படுத்தும்‌ நிலையில்‌ உள்ளது.

பூக்கும்‌ பருவத்தில்‌ உள்ள நெற்பயிர்களை இந்தப் பூஞ்சாணம்‌ மிக எளிதாக தாக்கும்‌ தன்மை கொண்டது. அதிகமான மழை மற்றும்‌ காற்றில்‌ அதிகமான ஈரப்பதம்‌ ஆகியவை இந்நோய்‌ பரவ சாதகமாக இருக்கின்றன. மண்ணில்‌ அதிகமான தழைச்சத்து மற்றும்‌ காற்று ஆகியவை இந்நோய்‌ அருகில்‌ உள்ள வயல்களுக்கு பரவ ஏதுவாக உள்ளது. மேலும்‌, பின்பருவ பயிர்களில்‌ இந்நோய்‌ அதிகம்‌ தென்படுகிறது. இந்நோயை கீழ்க்கண்ட முறைகளின்‌ மூலம்‌ கட்டுப்படுத்த முடியும்.‌

1) நோய்த் தடுப்பு முறைகள்:‌

நெல்‌ விதைகளை கார்பண்டசிம்‌ என்ற பூஞ்சாணக்‌ கொல்லியைப் பயன்படுத்தி ஒரு கிலோ விதைக்கு 2 கிராம்‌ என்ற அளவில்‌ விதைநோத்தி செய்து விதைக்க வேண்டும்‌. பாதிக்கப்பட்ட நெல்‌ மணிகளை நோயின்‌ ஆரம்ப நிலையில்‌ அழிக்க வேண்டும்‌. இதனால்‌ இந்நோய்‌ அருகில்‌ உள்ள நெற்பயிர்களுக்கு பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்‌. தழைச்சத்தைப் பிரித்து இடைவெளி விட்டு இட வேண்டும்‌.

2) உழவியல்‌ முறைகள்‌:

இந்நோய்‌ அதிகமாக தாக்கும்‌ இடங்களில்‌, முன்பருவ நடவு செய்ய வேண்டும்‌. பயிர்கள்‌ ஈரமாக இருக்கும்‌போது, வயல்களில்‌ உரமிடுதல்‌ மற்றும்‌ களை எடுத்தல் போன்ற செயல்களை தவறாமல் செய்ய வேண்டும்‌. அறுவடைக்கு முன்பு பழ நோய்‌ பாதிக்கப்பட்ட மணிகளைப் பிரித்து எடுத்து அழிப்பதன்‌ மூலம்‌ அடுத்த‌ பருவத்துக்கு வயலில்‌ நோய்‌ தீவிரமாவதை தடுக்க முடியும்‌.

3) ரசாயன முறைகள்‌:

நெற்பயிர்‌ புடைப்‌ பருவத்தில்‌ இருக்கும்போது ஒரு முறையும்‌, 50 சதவீதம் பூக்கும்‌ பருவத்தில்‌ இருக்கும்‌ போது ஒவ்வொருமுறையும்‌ கீழ்க்கண்ட ஏதாவது ஒரு பூஞ்சாணக்‌ கொல்லியை தெளிப்பதன்‌ மூலம்‌ இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்‌.

பிராபபிகனாசோல்‌ 25 ஈ. சி ஹெக்டேருக்கு 500 மிலி அல்லது காப்பர்‌ ஹைட்ராக்ஸைடு 77 டபிள்யூ.பி. ஹெக்டேருக்கு 1.25 கிலோ பயன்படுத்த வேண்டும்.

இத்தகவலை கோவை வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter