தமிழ்நாட்டில்‌ 2020ம் வருடத்திற்கான வடகிழக்குப்‌ பருவமழை முன்னறிவிப்பு - வேளாண்மை பல்கலைக்கழகம்

கோவை: தமிழ்நாட்டில்‌ 2020-ம்‌ வருடத்திற்கான வடகிழக்குப்‌ பருவமழை முன்னறிவிப்பை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


கோவை: தமிழ்நாட்டில்‌ 2020-ம்‌ வருடத்திற்கான வடகிழக்குப்‌ பருவமழை முன்னறிவிப்பை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வரும் 2020-ம்‌ ஆண்டின்‌ வடகிழக்குப்‌ பருவமழைக்‌ காலத்திற்கான (அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ டிசம்பர்‌ மாதம்‌ வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மையம்‌, பயிர்‌ மேலாண்மை இயக்ககத்தில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஜூலை மற்றும்‌ ஆகஸ்ட்‌ மாதங்களில்‌ பசிபிக்‌ பெருங்கடலில்‌ பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின்‌ மேற்பரப்பு நீரின்‌ வெப்பநிலை மற்றும்‌ தென்‌ மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன்‌ (Australian Rainman International V.4.3 Software) என்னும்‌ கணினி கட்டமைப்பைக்‌ கொண்டு 2020-ம்‌ ஆண்டிற்கான வடகிழக்குப்‌ பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும்‌ மாவட்டங்கள்‌:-

அரியலூர்‌, சென்னை, கோயமுத்தூர்‌, கடலூர்‌, தர்மபுரி, திண்டுக்கல்‌, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர்‌, கிருஷ்ணகிரி, நாகபட்டினம்‌, நாமக்கல்‌, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, சேலம்‌, சிவகங்கை, தஞ்சாவூர்‌, தேனி, திருவள்ளூர்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌ மற்றும்‌ விருதுநகர்‌.

சராசரி மழையளவிற்கும்‌ அதிகம்‌ எதிர்பார்க்கப்படும்‌ மாவட்டங்கள்‌:-

காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர்‌, திருச்சிராப்பள்ளி மற்றும்‌ வேலூர்‌. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில்‌ சராசரி மழையளவிற்கு ஒட்டிய மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட்‌ மற்றும்‌ செப்டம்பர்‌ மாதங்களில்‌ தமிழ்நாட்டின்‌ ஒரு சில பகுதிகளில்‌ சராசரி மழையளவைக்‌ காட்டிலும்‌, அதிக மழை பெறப்பட்டுள்ளதால்‌, மண்ணில்‌ போதுமான அளவு ஈரப்பதம்‌ இருக்கும்‌. இதனை பயன்படுத்தி விவசாயிகள்‌ விதைப்பு செய்வதன்‌ மூலம்‌, பயிரின்‌ முதன்மை நீர்‌ தேவையை பூர்த்தி செய்ய முடியும்‌.

ஆகவே, வரும் 2020-ம்‌ ஆண்டிற்கும் சராசரி வடகிழக்குப்‌ பருவமழை எதிர்பார்க்கப்படுவதால்‌, தற்போது விதைக்கும்‌ பயிர்கள்‌ நல்ல

வளர்ச்சியும்‌ மகசூலும்‌ பெற முடியும்‌.

மேலும்‌ தகவல்களுக்கு,

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மையம்‌

பயிர்‌ மேலாண்மை இயக்ககம்‌

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌

கோயமுத்தூர்‌ - 641 003.

Newsletter