பயிர்‌ மேம்பாட்டில்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பஞ்சகவ்யா..!

கோவை: இன்று பெரும்பாலானோர்‌ இயற்கை விவசாயம்‌, இயற்கை உணவு என இயற்கையினை நோக்கி திரும்பி உள்ளனர்‌.

கோவை: இன்று பெரும்பாலானோர்‌ இயற்கை விவசாயம்‌, இயற்கை உணவு என இயற்கையினை நோக்கி திரும்பி உள்ளனர்‌.

வேளாண்மையில்‌ செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல்‌ இயற்கை இடு பொருட்கள்‌ அளித்தல்‌ மற்றும்‌ இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை ஆகும்‌. இந்த இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யாவின்‌ பங்கு மகத்தானதாக கருதப்படுகின்றது.

பஞ்சகவ்யா பயிர்களின்‌ வளர்ச்சியை ஊக்குவித்து நோய்‌ எதிர்ப்புச்‌ சக்தியைத்‌ தரக்கூடிய இயற்கை ஊட்டச்சத்து உரமாக விளங்குகின்றது. இதனைக்‌ கொண்டு மண்ணின் தன்மையை மேம்படுத்தி பயிர்களின்‌ வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்‌. பஞ்சகவ்யா பசுமாட்டிலிருந்து பெறப்படும்‌ சாணம்‌, கோமியம்‌, பால்‌, தயிர்‌ மற்றும்‌ நெய்‌ ஆகிய ஐந்து முக்கிய இடு பொருட்களைக்‌ கொண்டு தயாரிக்கப்படுகின்றது.

இவை தவிர வெல்லம்‌, இளநீர்‌ மற்றும்‌ பூவன்‌ வாழைப்‌ பழம்‌ ஆகியவைகளும்‌ இடுபொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும்‌ சரியாக கலந்து நொதிக்கவைத்தால்‌ 30 நாட்களுக்கு பிறகு பஞ்சகவ்யா கரைசல்‌ தயாராகிவிடும்‌. இவைகளை சரியாகக்‌ கலந்து, தயாரித்த பஞ்சகவ்யா கரைசலை பயன்படுத்தினால்‌ அதிசயமான தீர்வைக்‌ காணலாம்‌.

பஞ்சகவ்யாவில்‌ பயிர்‌ வளர்ச்சிக்கு தேவையான பேரூட்டச்சத்துக்கள்‌, நுண்ணூட்டச்சத்துக்கள்‌, வளர்ச்சி ஊக்கிகள்‌ மற்றும்‌ பூச்சி மற்றும்‌ நோய்களைக்‌ கட்டுப்படுத்தும்‌ மூலப்‌ பொருட்கள்‌ ஆகியவை உள்ளன. மேலும்‌ நன்மை பயக்கும்‌ நுண்ணுயிரிகளான லேக்டோபேசிலஸ்‌, சூடோமோனஸ்‌, ஆக்டினோமைசிட்ஸ்‌, ஈஸ்ட்‌ மற்றும்‌ மெத்திலோட்ரோப்களும்‌ உள்ளன. இவைகள்‌ பயிர்களின்‌ வளர்ச்சி மற்றும்‌ நோய்‌ எதிப்பாற்றலை மேம்படுத்துகின்றன. பஞ்சகவயாவை அனைத்து விதமான பயிர்களுக்கும்‌ பயன்படுத்தலாம்‌.

பஞ்சகவயாவானது 3 % கரைசல்‌ என்ற அளவில்‌ இலைவழித்‌ தெளிப்பாக பரிந்துரை செய்யப்படுகின்றது. மேலும்‌ நீர்ப்பாசன முறையில்‌ ஒரு எக்டருக்கு 50 லிட்டர்‌ என்ற அளவில்‌ கலந்து சொட்டு நீர்ப்பாசனம்‌ அல்லது பாய்வுப்‌ பாசன முறையில் இதனைப்‌ பாய்ச்சவும்

இளநீர்‌ பூவன்‌ வாழைப்‌ பழம்‌ தண்ணீர்‌ பஞ்சகவ்யாவானது தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து, பயிர்களின்‌ வளர்ச்சியை மேம்படுத்தி, வேர்‌ பெருக்கத்தினை அதிகரித்து, பூச்சி மற்றும்‌ நோய்‌ தாக்குதலிருந்து பயிர்களை பாதுகாத்து, பயிர்களின்‌ மகசூலை அதிகரிப்பதோடு தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்யவும்‌ வழிவகை செய்கின்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பஞ்சகவயாவானது, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்திலுள்ள சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ துறையில்‌ விற்பனைக்கு உள்ளது. (விலை - ஒரு லிட்டர்‌ ரூ. 105/-).

மேலும்‌ தகவலுக்கு,

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோவை. 641 003.

தொலைபேசி: 0422 - 6611252/452 என்ற முகவரியில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter