இயற்கை கழிவுகளை அங்கக உரமாக்கும்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர்‌ கூட்டுக்‌ கலவை..!

கோவை: இயற்கை நமக்களித்த இணையற்ற வளங்களில்‌ ஒன்றான மண் வளத்தைக்‌ காப்பதில்‌ நம்‌ அனைவருக்கும்‌ பங்கு உள்ளது.

கோவை: இயற்கை நமக்களித்த இணையற்ற வளங்களில்‌ ஒன்றான மண் வளத்தைக்‌ காப்பதில்‌ நம்‌ அனைவருக்கும்‌ பங்கு உள்ளது.

அவ்வகையில்‌ இயற்கை உரங்களை இரசாயன உரங்களுடன்‌ இணைத்து பயன்படுத்துவதன்‌ மூலம்‌ மண்ணின்‌ வளத்தினை மேம்படுத்தி பயிர்‌

உற்பத்தியை பெருக்கி உர உபயோகத்‌ திறனை அதிகரித்து நல்ல தரமான உணவுப்‌ பொருட்களை உற்பத்தி செய்யலாம்‌. அங்கக உரங்கள்‌ மண்ணின்‌ கரிம அளவை மேம்படுத்தி பயனுள்ள நுண்ணுயிரிகளின்‌ எண்ணிக்கையை அதிகப்படுத்தி மேம்பட்ட தாவரச்‌ சத்துக்களின்‌ சுழற்சிக்கு வழிவகை செய்கின்றன. தரம்‌ குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலமாக மாற்றுவதில்‌ அங்கக உரங்கள்‌ முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்ககக்‌ கழிவுகளை, அங்கக உரங்களாக மாற்றி பயிர்களுக்கு அளிப்பது மிக முக்கியமானதாகும்‌. இதில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக நுண்ணுயிர்‌ கூட்டுக்‌ கலவையின்‌ பங்கு மகத்தானதாக கருதப்படுகின்றது. அங்கக கழிவுகளான வைக்கோல், நிலக்கடலைத்‌ தோல்‌, நெல்‌ உமி, சோளம்‌, கம்பு மற்றும்‌ மக்காச்சோள தட்டைகள், பயிர்‌ கழிவுகள்‌ பல, கால்நடை கழிவுகள்‌ மற்றும்‌ வீட்டு காய்கறி கழிவுகள்‌ ஆகியவற்றை மட்கவைப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை பயன்படுத்தப்படுகின்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக நுண்ணுயிர்‌ கூட்டுக்கலவை, மட்குதலை துரிதப்படுத்தக்‌ கூடிய பலவகை நன்மை தரும்‌ நுண்ணுயிரிகளைக்‌ கொண்டுள்ளது. மட்க கூடிய கழிவுகளுடன்‌ இந்த நுண்ணுயிர்க்‌ கூட்டுக்கலவையைச்‌ சேர்க்காத போது, அப்பொருட்களில்‌ இயல்பாக இருக்கும்‌ நுண்ணுயிரிகளே வளர்ந்து மக்குதலைச்‌ செய்கின்றன. இதனால்‌ கழிவுகள்‌ மக்குவதற்கு நீண்ட நாட்கள்‌ ஆகின்றது.

அதே சமயம்‌, நுண்ணுயிர்க்‌ கூட்டுக்கலவையைச்‌ சேர்க்கும்‌ போது, நுண்ணுயிர்களின்‌ எண்ணிக்கை அதிகரிப்பதுடன்‌, அவற்றின்‌ செயல்பாடு விரைவாக தொடங்கி குறைந்த காலத்தில்‌ மட்குதல்‌ நிறைவடைகிறது. ஒரு டன்‌ அங்கக கழிவை மட்க வைக்க 2 கிலோ நுண்ணுயிர்க் கூட்டுக்கலவை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

இந்த 2 கிலோ நுண்ணுயிர்க்‌ கூட்டுக்கலவையை 20 லிட்டர்‌ தண்ணீரில்‌ கலந்து கரைசலாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌. இக்கரைசலைக்‌ குவித்து வைக்கப்பட்டுள்ள அங்கக கழிவுகளின்‌ படுக்கைகளில்‌ சீராக தெளித்து கிளறி விட வேண்டும். கழிவுகளில்‌ ஈரப்பதம்‌ எப்போதும்‌ குறைந்தது 60 சதவிகிதம்‌ இருக்குமாறு நீர்‌ தெளிக்க வேண்டும்‌.

இவ்வாறு செய்வதன்‌ மூலம்‌ குறைந்த நாட்களில்‌ மட்கு உரம்‌ தயாராகின்றது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட மட்கு உரமானது ஒரு எக்டேருக்கு 5 டன்‌ என்ற அளவில்‌ பரிந்துரைக்கப்படுகின்றது. இதனை பயிரிடுவதற்கு முன்பு அடியுரமாக நிலத்தில்‌ அளிப்பதன்‌ மூலம்‌ மண்ணின் இயற்பியல்‌, வேதியியல்‌ மற்றும்‌ உயிரியல்‌ பண்புகள்‌ மேம்பட்டு, ஊட்டச்சத்துக்களை பயிர்கள்‌ எளிதில்‌ எடுத்துக்‌ கொள்ள உதவுகின்றது. மேலும்‌ பயிர்களின் உற்பத்தியையும்‌ அதிகரிக்க செய்கின்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக நுண்ணுயிர்‌ கூட்டுக்கலவையானது, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள சுற்றுச்சுழல்‌ அறிவியல்‌ துறையில்‌ விற்பனைக்கு உள்ளது. (விலை - ஒரு கிலோ ரூ. 63/-).

மேலும்‌ தகவலுக்கு,

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

சுற்றுச்சுழல்‌ அறிவியல்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோவை- 641 003.

தொலைபேசி: 0422 - 6611252/452 என்ற முகவரியில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter