தேங்காய்‌ மற்றும்‌ கொப்பரை விலை குறையவே வாய்ப்பு - வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

நம்‌ நாட்டில்‌, தேங்காய்‌ உணவு, பானம்‌, நார்‌ பொருள்‌ மறறும்‌ எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. வேளாண் மற்றும்‌ விவசாய நலஅமைச்சகத்தின்‌ மூன்றாவது முன்‌கூட்டிய மதிப்பீட்டின்‌ படி, 2018 -19 ஆண்டில்‌, தேங்காய்‌ 21.27 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில் பயிரிடப்பட்டு 163.83 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்‌ நாட்டில்‌, தேங்காய்‌ உணவு, பானம்‌, நார்‌ பொருள்‌ மறறும்‌ எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. வேளாண் மற்றும்‌ விவசாய நலஅமைச்சகத்தின்‌ மூன்றாவது முன்‌கூட்டிய மதிப்பீட்டின்‌ படி, 2018 -19 ஆண்டில்‌, தேங்காய்‌ 21.27 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில் பயிரிடப்பட்டு 163.83 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும்‌ ஆந்திரபிரதேசம்‌ ஆகிய மாநிலங்களில் தேங்காய்‌ அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில்‌, 2018-19ஆம்‌ ஆண்டில் 4.37 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ தேஙகாயானது பயிரிடப்பட்டு 36.12 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தஞ்சாவூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ கன்னியாகுமரி ஆகியவை தேங்காய்‌ உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌. தற்போது, கொப்பரை வரத்தானது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, மதுரை, விழுப்புரம்‌, பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை, கம்பம், தேனி, மைசூர்‌ (கர்நாடகா) மற்றும்‌ திருப்பதி, ஆந்திரபிரதேசம்‌ ஆகிய இடங்களிலிருந்து பெருந்துறை சந்தைக்கு வருகிறது. கேரளா வரத்தானது ஜனவரி, 2020 முதல்‌ வரத்தொடங்கும்.

தேங்காய்‌ உற்பத்தி செய்யும்‌ மாவட்டங்களின்‌ உற்பத்தியை, முந்தைய பருவத்துடன்‌ ஒப்பிடும்‌ போது, இப்பருவத்தில்‌ இயல்பாகஉள்ளது. நல்ல பருவமழையினால்‌ தேங்காயின்‌ உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தேங்காய் மற்றும்‌ கொப்பரை விலை ஏறுவதற்கான வாய்ப்புகள்‌ குறைவாக உள்ளது.

இச்சூழலில்‌, விவசாயிகள்‌ விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாணர்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌, கடந்த 18 ஆண்டுகளாக ஈரோட்டில்‌ உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்‌ நிலவிய தேங்காய்‌ மற்றும்‌ கொப்பரை விலையினை ஆய்வு செய்தது. மேலும்‌, பெருந்துறை வேளாண்‌ உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்தில்‌ சந்தை ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவின்‌ அடிப்படையில்‌ பிப்ரவரி- மார்ச், 2020 வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.15 முதல்‌ ரூ. 16 வரை இருக்கும்‌ மற்றும்‌ நல்ல தரமான கொப்பரை கிலோவுக்கு ரூ.90 முதல்‌ ரூ. 95 வரை இருக்கும்‌. மேலும்‌, தமிழ்நாட்டின்‌ முக்கிய உற்பத்தி மையங்கள்‌ மறறும்‌ பிற மாநிலங்களிருந்து வரும்‌ வரத்தை பொறுத்து விலையில்‌ மாற்றம் இருக்கும்‌. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில்‌ விற்பனை

முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌ 

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம் 

வேளாண் மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌-641 003

தொலைபேசி -0422-2431405

தொழிலநுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

வாசனை மற்றும்‌ மலைத் தோட்டபயிர்கள்துறை

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர் -641 003.

தொலைபேசி எண்-0422-6611284

Newsletter