வேளாண்‌ விரிவாக்க அலுவலர்களுக்கான உயிர்‌ எதிர்‌ நுண்ணுயிரியை பேரளவு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, பயிர்‌ நோயியல்‌ துறையில்‌, உயிரா எதிர் நுண்ணுயிரியை பேரளவில்‌ உற்பத்தி செய்தல்‌ பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மை துறை, வேளாண்‌ தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) வின்‌ உதவியால்‌ 13.11.2019 முதல்‌ 20.11.2019 வரை இரண்டு பகுதிகளாக ஆறு நாட்கள்‌ நடத்தப்பட்டது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, பயிர்‌ நோயியல்‌ துறையில்‌, உயிரா எதிர் நுண்ணுயிரியை பேரளவில்‌ உற்பத்தி செய்தல்‌ பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மை துறை, வேளாண்‌ தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) வின்‌ உதவியால்‌ 13.11.2019 முதல்‌ 20.11.2019 வரை இரண்டு பகுதிகளாக ஆறு நாட்கள்‌ நடத்தப்பட்டது. 



இப்பயிற்சியில்‌, வேளாண்‌ உதவி இயக்குநர்கள்‌ மற்றும்‌ வேளாண்‌ அலுவலர்‌ என மொத்தம்‌ 60 அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌. எதிர் உயிர்‌ நுண்ணுயிரி கொல்லியை பேரளவில்‌ உற்பத்தி செய்யும்‌ தொழில்நுட்பம்‌ மிக துல்லியமாக செயல் விளக்கம்‌ மூலமாக கொடுக்கப்பட்டது.

தொடக்க நாளான 13.11.2019 அன்று முனைவா்‌ கு. பிரபாகர்‌, இயக்குநர்‌, பயிர்‌ பாதுகாப்பு மையம்‌, முனைவர்‌. ஐஜவஹாலால்‌, இயக்குநர், வேளாண்மை விரிவாக்கம்‌ மற்றும்‌ இரகுசந்தா மாணவர்‌ நல முதன்மையர் ஆகியோரால்‌ தொடங்கி வைக்கப்பட்டது. இதில்‌ பயிர்‌ பாதுகாப்பு இயக்குநர் அவர்கள்‌ பூச்சி கொல்லியின்‌ நச்சுத்தன்மையினால்‌ மனிதன்‌ மற்றும்‌ மண்ணிற்கு ஏற்படும்‌ பல தீமைகள்‌ குறித்து வலியுறுத்தினார்‌. இதை அதிக அளவில்‌ உபயோகித்தால்‌ பசுமையான, தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்‌ என்றும்‌ கூறினார்‌. முனைவர்‌ ஜவஹாலால்‌, உயிர்‌ எதிர்‌ நுண்ணுயிரியை பயன்படுத்துவது அவசியம்‌ என்றும்‌ மேலும்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலையங்களில்‌ இவ்வகையான எதிர்‌ நுண்ணுயிரிகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதோடு அவற்றை வேளாண்மை துறை தொழில்‌ நுட்பம்‌ வாயிலாக கொடுப்பதையும்‌ குறிப்பிட்டார்‌.

முனைவர் தி. இரகுசந்தா, உயிர்‌ எதிர்‌ நுண்ணுயிரிகள்‌ ஆராய்ச்சியில்‌ பயன்படுத்துவதும்‌ மற்றும்‌ தற்போது ஆராய்ச்சி கூடத்தில்‌ இருக்கும்‌ புதிய உயிர்‌ எதிர நுண்ணுயிரிகளைப்‌ பற்றியும்‌ விளக்கமாக எடுத்துக்கூறினார்‌. சித்ரா தேவி, வேளாண்மை இணை இயக்குநர்‌, அவர்கள்‌, வேளாண்மையில்‌ பயிர் பாதுகாப்பிற்கு ஒருங்கிணைந்த பூச்சி நோய்‌ மேலாண்மையின்‌ அவசியம்‌ மற்றும்‌ மக்காச்சோளத்தில்‌ படைப்புழு மேலாண்மைக்கு ஒருங்கிணைந்த பயிர்‌ பாதுகாப்பு அவசியம்‌ என்பதையும்‌ வலியுறுத்தினர்.

மேலும்‌ நீடித்த நிலையான மகசூல்‌ பெற உயிர்‌ எதிர்‌ கொல்லிகள்‌ பயன்படுத்து அவசியம்‌ என்று கூறினார்‌. இவ்விழாவில்‌ உயிர் எதிர்‌ கொல்லி பேரளவு உற்பத்தி பற்றிய பயிற்சிக்‌ கையேடு வெளியிடப்பட்டது. முனைவர்‌ முத்தமிழின்‌, பேராசிரியர் அவர்கள்‌ இப்பயிற்சி பற்றியும்‌ அதன்‌ நோக்கத்தையும்‌ தெளிவாக எடுத்துக்கூறினார்‌. முனைவர்‌ செந்தில் வேல்‌ மற்றும்‌ முனைவர்‌ சுதா, பயிர்‌ நோயியல்‌ உதவி பேராசிரியர்கள்‌ செய்முறை பயிற்சி அளித்தனர்.



இப்பயிற்சியில்‌ உயிர் எதிர் கொல்லிகளை பிரித்தெடுப்பது, திட ஊடகம்‌, நார வழி ஊடகம்‌ தயாரிப்பது மற்றும்‌ உயிர் எதிர்‌ கொல்லிகளை பயிர்களுக்கு கொடுப்பதற்கேற்றவாறு தயார்‌ செய்வது, இறுதியாக தரக்கட்டுபாடு போன்றவையும்‌ இப்பயிற்சியில்‌ செயல் விளக்கமாகக் கொடுக்கப்பட்டது.

Newsletter