மக்காச்சோளத்தின் விலை குறைய வாய்ப்பு; குவிண்டாலுக்கு ரூ.1800 முதல்‌ ரூ. 2000 ஆக இருக்கும்‌ என கணிப்பு

கோவை: வேளான்‌ மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டின்‌படி, 2018-19ம்‌ ஆண்டில்‌ மக்காச்சோளமானது இந்தியாவில் 93 லட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 272.30 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படும்‌ என தெரிவிக்கிறது.

கோவை: வேளான்‌ மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டின்‌படி, 2018-19ம்‌ ஆண்டில்‌ மக்காச்சோளமானது இந்தியாவில் 93 லட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 272.30 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படும்‌ என தெரிவிக்கிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம்‌, கர்நாடகா, பீகார்‌, தெலுங்கானா மற்றும்‌ ஆந்திரபிரதேசம்‌ ஆகிய மாநிலங்கள்‌ மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன. தமிழ்நாட்டில்‌ சேலம்‌, திண்டுக்கல், நாமக்கல்‌, புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ அதிகளவில்‌ மக்காச்சோளம்‌ பயிரிடப்படுகிறது.

வாத்தக மூலங்களின்‌ படி தமிழ்நாட்டிற்கு மக்காச்சோளத்தின்‌ வரத்தானது ஆந்திரபிரதேசம்‌, கர்நாடகா மற்றும்‌ பீகார்‌ ஆகிய மாநிலங்களிலிருந்து வருகிறது. இம்‌மூன்று மாநிலங்கள்‌ தமிழ்நாட்டின்‌ மக்காச்சோள தேவையில்‌ 30 சதவீதம்‌ பூர்த்தி செய்கின்றன. கர்நாடகாவிலிருந்து வரும்‌ வரத்தானது செப்டம்பர் 2019ல் தொடங்கி பிப்ரவரி 2020 வரை நீடிக்கும்‌, ஆந்திரா மற்றும்‌ பீகாரிலிருந்து வரும்‌ வரத்து அக்டோபரில்‌ 2019 தொடங்குகின்றன. தமிழ்நாட்டில்‌ அதிகளவு வரத்தானது அரியலூர்‌, பெரம்பலூர்‌, தேனி, கோவில்பட்டி மற்றும்‌ கந்தர்வகோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து டிசம்பரிலிருந்தும்‌ மற்ற மாவட்டங்களிலிருந்து ஜனவரி 2020 முதல்‌ ஏப்ரல்‌ 2020 வரையும்‌ இருக்கும்‌ எனக்‌ கருதப்படுகிறது.

மக்காச்சோளமானது கோழித்தீவனத்தில்‌ முக்கிய பங்கு வகிப்பதால்‌ அதன்‌ தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவில்‌ மக்காச்சோளம்‌ விளையும்‌ முக்கிய மாநிலங்களில்‌ படைப்புழு தாக்கத்தால்‌ முந்தைய மாதங்களில்‌ வரத்து குறைந்து விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது பருவமழையின்‌ காரணமாக படைப்புழுவின்‌ தாக்கம்‌ குறைவால்‌ பயிர்‌ வளர்ச்சியானது மக்காச்சோளம்‌ உற்பத்தி மாநிலங்களில்‌ நன்றாக உள்ளது. கர்நாடகாவிலிருந்து வரத்து ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில்‌ வரத்து போதுமானதாக இருப்பதால்‌ விலை குறைய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌ கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்‌ நிலவிய மக்காச்சோளம்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வுகளின்‌ அடிப்படையில்‌, தரமான மக்காச்சோளத்தின்‌ பண்ணை விலை அறுவடையின்‌ போது படைப்புழு தாக்கம்‌ தமிழ்நாட்டில்‌ இல்லையெனில்‌ (நவம்பர்‌'19- ஜனவரி'20) குவிண்டாலுக்கு ரூ.1800 முதல்‌ ரூ. 2000 ஆக இருக்கும்‌. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய ஆலோசனையின்‌ அடிப்படையில்‌ சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌,

வேளான்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூர்‌ - 641 003.

தொலைபேசி- 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

சிறு தானிய துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி - 0422-2450507

Newsletter