வேளாண்மை விரிவாக்க அலுவலர்களுக்கான உயிர்‌ எதிர்‌ நுண்ணுயிரியை பேரளவு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ உயிர்‌ எதிர்‌ நுண்ணுயிரியை பேரளவில்‌ உற்பத்தி செய்தல்‌ பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மை துறை, வேளாண்‌ தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA)வின்‌ உதவியால்‌ 13.11.2019 முதல்‌ 15.11.2019 வரை மூன்று நாட்கள்‌ நடைபெறுகிறது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ உயிர்‌ எதிர்‌ நுண்ணுயிரியை பேரளவில்‌ உற்பத்தி செய்தல்‌ பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மை துறை, வேளாண்‌ தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA)வின்‌ உதவியால்‌ 13.11.2019 முதல்‌ 15.11.2019 வரை மூன்று நாட்கள்‌ நடைபெறுகிறது.

இந்த பயிற்சி, எதிர்‌ உயிர்‌ நுண்ணுயிர்‌ கொல்லியை பேரளவில்‌ உற்பத்தி செய்யும்‌ தொழில்நுட்பத்தை மிக துல்லியமாக செயல் விளக்கம்‌ மூலமாக கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டது.

தொடக்க நாளான கடந்த 13ம் தேதி பயிர்‌ பாதுகாப்பு மைய இயக்குநர்‌ முனைவர்‌ கு. பிரபாகர்‌ மற்றும்‌ வேளாண்‌ விரிவாக்க இயக்குநர்‌ முனைவர்‌. ஜவஹர்லால்‌ அவர்களால்‌ தொடங்கிவைக்கப்பட்டது. இதில்‌ அவர்‌ பூச்சி கொல்லியின்‌ நச்சுத்தன்மையினால்‌ மனிதன்‌ மற்றும்‌ மண்ணிற்கு ஏற்படும்‌ பல தீமைகள்‌ குறித்து வலியுறுத்தினார்‌. இதை அதிக அளவில்‌ உபயோகித்தால்‌ பசுமையான, தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்‌ என்றும்‌ கூறினார்‌. முனைவர்‌ ஜவஹாலால்‌ அவர்கள்‌ பூச்செடிகளுக்கு உயிர்‌ எதிர்‌ நுண்ணுயிரியைப் பயன்படுத்துவது அவசியம்‌ என்றும்‌ மற்றும்‌ அவைகளில்‌ இருக்கும்‌ நிறமி உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும்‌ கூறினார்‌.

மாணவர்‌ நல இயக்க முதன்மையர்‌ முனைவர்‌ தி. இரகுசந்தர்‌ அவர்கள்‌ உயிர்‌ எதிர்‌ நுண்ணுயிரிகள்‌ ஆராய்ச்சியில்‌ பயன்படுத்துவதும்‌ மற்றும்‌ தற்போது ஆராய்ச்சியில்‌ கூடத்தில்‌ இருக்கும்‌ புதிய உயிர்‌ எதிர்‌ நுண்ணுயிரிகளைப்‌ பற்றியும்‌ விளக்கமாக எடுத்துக்கூறினார்‌.

கோவை வேளாண்மை இணை இயக்குநர்‌ சித்ரா தேவி அவர்கள்‌ வேளாண்மையில்‌ பயிர்‌ பாதுகாப்பிற்கு ஒருங்கிணைந்த பூச்சி நோய்‌ மேலாண்மை அவசியம்‌ என்றும்‌ மக்காச்சோளத்தில்‌ படைப்புழு மேலாண்மைக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அவசியம்‌ என்பதையும்‌ வலியுறுத்தினார்‌. இவ்விழாவில்‌ உயிர்‌ எதிர்‌ கொல்லி பேரளவு உற்பத்தி பற்றிய பயிற்சிக்‌ கையேடு வெளியிடப்பட்டது.

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ (பொறுப்பு) முனைவர்‌. கா. கார்த்திகேயன்‌ அவர்கள்‌ பயிற்சியில்‌ பங்கேற்பவர்களை வரவேற்றார்‌. பேராசிரியர்‌ முனைவர்‌ முத்தமிழனண்‌ அவர்கள்‌ இப்பயிற்சி பற்றியும்‌ அதன்‌ நோக்கத்தையும்‌ தெளிவாக எடுத்துக்கூறினார்‌. முனைவர்கள்‌ செந்தில் வேல்‌ மற்றும்‌ à®….சுதா, பயிர்‌ நோயியல்‌ உதவி பேராசிரியர்கள்‌ செய்முறை பயிற்சி அளித்தனர்‌.

Newsletter