காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு - வடகிழக்கு பருவமழையை பொறுத்து விலையில்‌ மாற்றம்

தக்காளி தேசிய தோட்டக்கலை வாரியத்தின்‌ முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2018-19ம்‌ ஆண்டு இந்தியாவில்‌ தக்காளி 8.14 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ சாகுபடி செய்யப்பட்டு 205.15 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தியாகும்‌ என்று அறிவித்துள்ளது. இந்தியாவில், மத்திய பிரதேசம்‌, ஆந்திர பிரதேசம்‌, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா மற்றும்‌ மேற்கு வங்காளம்‌ ஆகியவை தக்காளி அதிகமாக உற்பத்தி செய்யும்‌ மாநிலங்களாகும்‌.

தக்காளி

தேசிய தோட்டக்கலை வாரியத்தின்‌ முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2018-19ம்‌ ஆண்டு இந்தியாவில்‌ தக்காளி 8.14 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ சாகுபடி செய்யப்பட்டு 205.15 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தியாகும்‌ என்று அறிவித்துள்ளது. இந்தியாவில், மத்திய பிரதேசம்‌, ஆந்திர பிரதேசம்‌, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா மற்றும்‌ மேற்கு வங்காளம்‌ ஆகியவை தக்காளி அதிகமாக உற்பத்தி செய்யும்‌ மாநிலங்களாகும்‌.

தமிழ்நாட்டில்‌ கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ ஆகிய மாவட்டங்கள்‌ தக்காளி உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌. தமிழ்நாட்டில், ஆண்டு முழுவதும்‌ தக்காளி முக்கிய பருவங்களில்‌ சாகுபடி செய்யப்படுகிறது. கோயம்புத்தூர்‌ சந்தைகளுக்கு நாச்சி பாளையம்‌, முத்தம்பட்டி, செட்டிபாளையம்‌ மற்றும்‌ ஆலாந்துறை, ஆகிய பகுதிகளிலிருந்து தக்காளி வரத்தானது வருகிறது. கர்நாடக மாநிலம்‌ தும்கூரிலிருந்து தக்காளி வரத்தானது அக்டோபர் 2019 முதல்‌ வரத்தொடங்கியுள்ளது. இவ்வரத்தானது டிசம்பர்:2019 மாத இறுதி வரை வரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்திரி

தேசிய தோட்டக்கலை வாரியத்தின்‌ முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2018-19ம்‌ ஆண்டு இந்தியாவில்‌ கத்திர்‌ 7.35 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ சாகுபடி செய்யப்பட்டு 129.87 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தியாகும்‌ என்று அறிவித்துள்ளது. மேற்கு வங்காளம்‌, ஒடிசா, குஜராத்‌, பீகார்‌ மற்றும்‌ மத்திய பிரதேசம்‌ ஆகிய மாநிலங்கள்‌ கத்திரி உற்பத்தியில்‌ முக்கிய பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்‌, திருவண்ணாமலை மற்றும்‌ வேலூர்‌ ஆகிய மாவட்டங்கள்‌ கத்திரி பயிரிடுவதில்‌ பெரும்பங்கு வகிக்கின்றன. வாத்தக மூலங்களின்படி, கோயம்புத்தூர்‌ மொத்த சந்தைக்கு நாச்சிப்பாளையம்‌, கேளம்பாளையம்‌ மற்றும்‌ பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து கத்திரி வருகிறது.

வெண்டை

தேசிய தோட்டக்கலை வாரியத்தின்‌ முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2018-19 ஆம்‌ ஆண்டு இந்தியாவில்‌ வெண்டை, 2018-19-ம்‌ ஆண்டில் 5.11 இலட்சம்‌ எக்டர்‌ நிலப்பரப்பில்‌ பயிரிடப்பட்டு 62.19 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்‌, சேலம்‌, தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோயம்புத்தூர்‌ மற்றும்‌ மதுரை ஆகிய மாவட்டங்களில்‌ வெண்டை அதிகளவு உற்பத்தியில்‌ செய்யப்படுகின்றன. கோயம்புத்தூர்‌ சந்தைக்கு, திருச்சி, தலைவாசல், வைகுண்டம்‌ மற்றும்‌ ஒட்டன்சத்திரம்‌ ஆகிய பகுதிகளிலிருந்து வெண்டை வரத்தானது அதிகளவு காணப்படுகிறது.

இச்சூழலில்‌, விவசாயிகள்‌ விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌, வேளாண் மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌, ஒட்டன்சத்திரம்‌ சந்தையில்‌ கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும்‌ வெண்டை விலை மற்றும் சந்தை ஆய்வுகள்‌ மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகளின்‌ அடிப்படையில்‌, அறுவடையின் போது தரமான தக்காளியின்‌ பண்ணை விலை ரூ.18 முதல்‌ ரூ. 20, வரை, நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ. 25, முதல்‌ ரூ. 27, ஆகவும்‌ மற்றும்‌ தரமான வெண்டையின்‌ பண்ணை விலை ரூ. 20 முதல்‌ ரூ. 22, வரை இருக்கும்‌ என்று அறியப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதை பொறுத்து காய்கறிகளின்‌ விலையில்‌ மாற்றங்கள்‌ இருக்கும்‌. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின்‌ அடிப்படையில்‌ விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு,




உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌,

வேளான்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி எண்: 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

காய்கறிப்‌ பயிர்கள்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி எண்: 0422-6611374 

Newsletter