தேங்காய் மற்றும்‌ கொப்பரையின்‌ விலை நிலையாக இருக்கும்‌ : தமிழ்நாடு வேளாண் பல்கலை., அறிவிப்பு

கோவை : தேங்காய் மற்றும்‌ கொப்பரையின்‌ விலை நிலையாக இருக்கும்‌ என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவை : தேங்காய் மற்றும்‌ கொப்பரையின்‌ விலை நிலையாக இருக்கும்‌ என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

உலகளவில்‌ தேங்காய்‌ உற்பத்தி செய்யும்‌ நாடுகளில்‌ இந்தோனேசியா, பிலிப்பைன்ஸக்கு அடுத்தப்பபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில்‌ உள்ளது. தேசிய தோட்டக்கலை வாரியம்‌ 2018-19ஆம்‌ ஆண்டின்‌ முதல்‌ முன்கூட்டிய மதிப்பீட்டின்‌ படி, தேங்காய் 21.27 லட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 163.83 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. இந்தியாவில்‌ தேங்காய்‌ உற்பத்தியில்‌ கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும்‌ ஆந்திரா ஆகிய மாநிலங்கள்‌ 93 சதவீதத்திற்கு மேல்‌ பங்கு வகிக்கின்றன. இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு நாடுகள்‌, ஐக்கிய நாடுகள்‌, ஈரான்‌ மற்றும்‌ காத்தார்‌ ஆகிய நாடுகளுக்கு அதிகளவு தேங்காய்‌ ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில்‌ 2017-18ஆம்‌ ஆண்டில்‌ 36.12 டன்கள்‌ தேங்காயானது 4.47 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தஞ்சாவூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ கன்னியாகுமரி! ஆகியவை தேங்காய்‌ உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌. தற்போது பெரும்பாலான கொப்பரை வரத்தானது பட்டுக்கோட்டை, கிருஷ்ணகிரி), தர்மபுரி, வேலூர்‌, பொள்ளாச்சி, சேலம்‌, காங்கேயம்‌, மைசூர்‌ (கர்நாடகா) மற்றும்‌ திருப்பதி (ஆந்திரபிரதேசம்‌) ஆகிய இடங்களிலிருந்து பெருந்துறை சந்தைக்கு வருகிறது. முந்தைய பருவத்தை ஒப்பிடுகையில்‌ இப்பருவத்தில்‌ கொப்பரையின்‌ வரத்தானது குறைவாக உள்ளது. தேங்காய்‌ எண்ணெய்‌ சந்தையில்‌ ஏற்றம்‌ இல்லாவிடினும்‌ பண்டிகை காலங்கள்‌ வரவுள்ளதால்‌ கொப்பரையின்‌ விலையானது டிசம்பர்‌ மாதம்‌ வரை நிலையாக இருக்கும்‌.

இச்சூழலில்‌, விவசாயிகள்‌ விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்தின்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்இயங்கி வரும்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின்‌ விலை முன்னறிவிப்பு‌ திட்டம்‌, கடந்த 18 ஆண்டுகளாக ஈரோட்டில்‌ உள்ள அவல பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம்‌ மற்றும்‌ பெருந்துறை வேளாண்‌ உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்திலும்‌ நிலவிய தேங்காய்‌ மற்றும்‌ கொப்பரை விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவின்‌ அடிப்படையில்‌ அக்டோபர்‌ - டிசம்பர்‌ 2019 வரை தரமான தேங்காயின்‌ பண்ணை விலை ரூ.13 முதல்‌ ரூ 14 வரை இருக்கும்‌ மற்றும்‌ நல்ல தரமான கொப்பரை கிலோவுக்கு ரூ.100 முதல்‌ ரூ.102 வரை இருக்கும்‌ என அறியப்படுகிறது. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில்‌ விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்-641 003

தொலைபேசி -0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள

பேராசிரியர் மற்றும் தலைவர்

வாசனை மற்றும் மலைத்தோட்டபயிர்கள்துறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்-641 003.

தொலைபேசி எண் -0422-6611284

மக்கள் தொடர்பு அலுவலர்

Newsletter