தமிழ்நாட்டில்‌ 2019-ம்‌ வருடத்திற்கான வடகிழக்குப்‌ பருவமழை முன்னறிவிப்பு

2019-ம்‌ ஆண்டின்‌ வடகிழக்கு பருவமழைக்‌ காலத்திற்கான (அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ டிசம்பர் மாதம்‌ வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள பயிர் மேலாண்மை இயக்கத்தில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2019-ம்‌ ஆண்டின்‌ வடகிழக்கு பருவமழைக்‌ காலத்திற்கான (அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ டிசம்பர் மாதம்‌ வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள பயிர் மேலாண்மை இயக்கத்தில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஜீலை மற்றும்‌ ஆகஸ்ட்‌ மாதங்களில்‌ பசிபிக்‌ பெருங்கடலில்‌ பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின்‌ மேற்பரப்பு நரின்‌ வெப்பநிலை மற்றும்‌ தென்‌ மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன்‌ (கம விரவு Rainman International V.4.3 Software) etestepyip கணினி கட்டமைப்பைக்‌ கொண்டு 2019-ம்‌ ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

தமிழ்நாட்டின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ 2019-ம்‌ ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை 60 சதவிகித வாய்ப்பிற்கு சராசரி மழையளவாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மற்றும்‌ செப்டம்பர் மாதங்களில்‌ சராசரி மழையளவைக்‌ காட்டிலும்‌, அதிக மழை பெறப்பட்டதால்‌, மண்ணில்‌ போதுமான அளவு ஈரப்பதம்‌ இருக்கும்‌. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள்‌ விதைப்பு செய்வதன்‌ மூலம்‌, பயிரின்‌ முதன்மை தேவையை பூர்த்தி செய்ய முடியும்‌. 2019-ம்‌ ஆண்டிற்கும்‌ சராசரி வடகிழக்குப்‌ பருவமழை எதிர்பார்க்கப்படுவதால்‌, தற்போது விதைக்கும்‌ பயிர்கள்‌ நல்ல வளர்ச்சியும்‌ மகசூலும் பெற முடியும்‌.

Newsletter