வரும் 20-ம் தேதி மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 20ம் தேதி மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 20ம் தேதி மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிணற்றுக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் “மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி” வரும் 20ம் தேதி நடைபெறும். கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.

• மசாலா பொடிகள்

• தயார்நிலை பேஸ்ட் 

• வாழைப்பூ ஊறுகாய் 

• பாகற்காய் ஊறுகாய் 

• காளான் ஊறுகாய்

• கத்தரிக்காய் ஊறுகாய்

• வெங்காய ஊறுகாய்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 750 பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,

வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,

கோயமுத்தூர் – 641 003.

தொலைபேசி எண் - 0422-6611340 , 6611268 , 94425 99125.

Newsletter