தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்தர மதிப்பீட்டுப் பிரிவு

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தின் மூலமாக இன்று உள்தர மதிப்பீட்டு பிரிவு நிறுவப்பட்டு சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தின் மூலமாக இன்று உள்தர மதிப்பீட்டு பிரிவு நிறுவப்பட்டு சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது. 



இக்கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் நீ. குமார் விழாவினை தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பொருளாதாரத் துறை தலைவர் பேராசிரியர் ப.வனிதா, அசிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழக தர மேம்பாட்டிற்காக உள்நாட்டு தர மதிப்பீடு மற்றும் தேசிய தர மதிப்பீடு பற்றி உரை நிகழ்த்தினார். உயிர் தொழில் நுட்பவியல் துறை பேராசிரியர் முனைவர் எம். இரவீந்திரன், தேசிய தர மதிப்பீட்டிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசினார். 



கல்லூரி முதன்மையர் மற்றும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

Newsletter