பயிர்களை காக்க நுண்ணீர் பாசனம் அவசியம் : தமிழ்நாடு வேளாண்மைத் துறை வலியுறுத்தல்

கோவை : கோடையில் பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைத் துறை வலியுறுத்தியுள்ளது.

கோவை : கோடையில் பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைத் துறை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வேளாண்மைத் துறை தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதுமான மழை இல்லாததால், தற்சமயம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வறண்ட சூழ்நிலை நிலவுகிறது. கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு ஆகியவற்றில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு வழக்கமான வாய்க்கால் முறையில் நீர் பாய்ச்சினால், நிறைய நீர் வீணாகும்.



இந்த நிலையில், அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர்ப்பாசனம் சம்பந்தமான மானிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன் படுத்தினால், சிறப்பாக சாகுபடி பணியினை மேற்கொள்ள முடியும். ஆகவே, ஒவ்வொரு கிராமம் வாரியாக நுண்ணீர் பாசனத்துக்காக இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஒவ்வொரு உதவி இயக்குனரும் கிராமம் வாரியாக இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப ஒவ்வொரு உதவி வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலர்களும் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

கிணறு அல்லது போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை சந்தித்து உரிய அலுவலர்களிடம் அறிவுரை பெற்று பயன்பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter